Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, December 28, 2010

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி

0 comments

புதுச்சேரி டிச 28
சாமிபிள்ளை தோட்டதில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சிபிஎம்,சிபிஜ,அதிமுக ஆகிய கட்சிகள் சார்பில் சிவாஜி சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லெனின்நகர்,தவமணிநகர்,உள்ளிட்ட உள்புறச்சாலைகளை சீரமைக்ககோரியும்.தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புரப்படுத்த வேண்டும்.விடுபட்ட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.தெரு விலக்குகள் எரிய நடவடிக்கை =எடுக்க வேண்டும்.என்பன கோரிக்கைகளை வலியுருத்தி இப்போரட்டம் நடைபெற்றது.
இப்போரட்டத்திர்க்கு சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை,சிபிஜ மாநிலக்குழு உறுப்பினர் சரவணன்,அதிமுக கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சட்டமன்ற உறுப்பினர் ஆர்.விசுவநாதன்,அதிமுக =செயலர் அன்பானந்தம், ஆகியோர் பேசினார்கள். இப்போரட்டத்தி திரளானோர் பங்கேற்றனர்.
Read more...

கொடிமரத்தை திருடி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு

0 comments

புதுச்சேரி டிச 28
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் கொடிமரத்தை திருடி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யகோரி முத்தியாள் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் கொடிமரம் முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில் அமைக்கப்பட்டு இருந்ததை சில மர்மநபர்கள் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.இச்சம்பவத்தை கண்டித்தும் திருடிசென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யகோரி இப்போரட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் கமிட்டி உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர கமிட்டி பொறுப்பு சயலாளர் மதிவானன்,பிரதேச குழு உறுப்பினர் பிரபுராஜ்,கிளைசெயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர் கலியமூர்த்தி, உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக புதிய கொடிமரத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
Read more...

பெண்கள் நினைத்தாள் எதுவும் செய்ய முடியும்

0 comments


புதுச்சேரி =டிச 26
மத்திய மாநில அரசுகளின் விலைவாசி உயர்வால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் குற்றம் சாட்டினார்.
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் சார்பில் விலை வாசி உயர்வை எதிர்த்து புதுச்சேரி சாரம் கீர்த்தி மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்க்கு இயக்கத்தின் தலைவர் அன்பரசி ஜூலியட் தலைமை தாங்கினார்.செயலாளர் மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.சமம் இயக்க நிர்வாகிகள் சந்திரா,மலர்விழி,சந்தானலட்சுமி,வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசுகையில் மத்திய அரசின் தவரான பொருளாதார கொள்கையால் நாளுக்கு நாள் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு அதிகரித்து கொண்டே இருக்கிறது.இவ்விலையேற்றத்தால் அன்றாடம் பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் குடும்ப விரிசலும் ஏற்படுகிறது. எனவே நமக்கான ஆட்சி எது என்று தீர்மானிக்க வேண்டும்.பெண்கள் நினைத்தாள் எதுவும் செய்ய முடியும். என்று பேசினார்
முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து 50 க்கும் மேற்பட்ட பகுதியில் 2ஆயிரம் குடும்பங்களில் எடுக்க பட்ட சர்வே குறித்து இயக்கத்தின் துனை தலைவர் கலைச்செல்வி பேசினார்.புதுவை அறிவியல் இயக்க துனை தலைவர் தட்சணாமூர்த்தி மற்றும்பேராசிரியர் ஹேமலதா, ரமேஷ் ஆகியோர் பேசினார்கள்.கருத்தரங்கத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
படம் உள்ளது
Read more...
Sunday, December 19, 2010

Thousands pay last respects to Pappa Umanath

0 comments


Caption:CPI (M) Polit Bureau member and Rajya Sabha MP Brinda Karat (third from left) and Umanath (second from right), paying respects to veteran CPI (M) leader Pappa Umanath, on Saturday. Photo: R. Ashok

Members of the Communist Party of India (Marxist) and leaders of various political parties on Saturday paid respects to the veteran CPI (M) leader Pappa Umanath who passed away here on Friday.

Draped in party flag, the body of 80-year-old Pappa Umanath was kept at the CPI (M) district unit office in the city to enable general public and party functionaries to pay their homage. CPI (M) Polit Bureau member and Rajya Sabha MP Brinda Karat flew down to Tiruchi to pay respects to the departed leader who was one of the founders of the All India Democratic Women’s Association.

CPI (M) State secretary G. Ramakrishnan, party’s former State secretary N. Varadharajan, senior CPI (M) leaders T. K. Rengarajan and K. Varadharajan, party MLAs, CITU leaders and members, State Transport Minister K.N. Nehru, Tiruchi Lok Sabha MP P. Kumar, MDMK urban district secretary A. Malarmannan, AIADMK urban district secretary Manoharan, Srirangam MLA Paranjothi paid their respects to the departed leader.
Read more...

பெட்ரோல் விலை உயர்வை திரும்பபெறக்கோரி சிஜடியூ ஆட்டோ சங்கத்தின் =சார்பில் ஆட்டோவை கயிற்றால் கட்டி நூதன போரட்டம்

0 comments


புதுச்சேரி டிச 16
மத்திய காங்கிர°-திமுக அரசின் பெட்ரோல் விலை உயர்வை திரும்பபெறக்கோரி சிஜடியூ ஆட்டோ சங்கத்தின் =சார்பில் ஆட்டோவை கயிற்றால் கட்டி நூதன போரட்டம் புதுவையில் நடைபெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும் தொடர்ந்து எட்டு முறை பெட்ரோல் விலை உயர்த்தி இருப்பதை திரும்பப்பெறக் கோரியும் நூதன முறையில் இப்போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஐடியூ பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் கௌரவத் தலைவர் த. முருகன் சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், சிஐடியூ மாவட்ட தலைவர்கள் ராமசாமி, முருகன், நிலவழகன், குணசேகரன், சிவக்குமார் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மது, மதிவாணன், சேகர், மணவாளன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆட்டோவை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
படம் உள்ளது.
Read more...

மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்து மறைந்த பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்

0 comments



புதுச்சேரி டிச 19
மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்து மறைந்த பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முதுபெரும் தோழரும் புதுச்சேரி பிரதேசக் குழு உறுப்பினருமான பி. ராமமூர்த்தி படத்திறப்பு விழா நவீனா கார்டனில் நடைப்பெற்றது. இப்படத்திறப்பு விழாவிற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயற்க்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தோழர் ராமமூர்த்தியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து பேசுகையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியில் சேர்ந்த பி. ராமமூர்த்தி நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கையால் வேலையை இழந்தார். 1961 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் தோழர் பி. சீனிவாசராவ் அறைக்கூவலுக்கு இணங்க நடந்த போராட்டத்தில் 1000 கணக்கான தோழர்கள் கைதாகி சிறைக்கு சிறைக்கு சென்றனர். பி. ராமமூர்த்தியும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றார்.
தன் வாழ்நாள் முழுவதும் கட்சி பிரசுரங்களான தீக்கதிர், மார்க்சி°ட், செம்மலர் ஆகியவை மக்களிடம் கொண்டு சென்றவர். தன் நலத்தை கருதாமல் கட்சி நலனே பெரியது என்று எண்ணிய ராமமூர்த்தி அவர்கள் உயர் சாதி குலத்தில் பிறந்தாலும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தலித் மக்களின் விடுதலைக்காக போராடியவர். மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்த வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அவருக்கு பாடப்புத்தகம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குணசேகரன்
மாநிலக்குழு உறுப்பினர் பேசுகையில் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தோடு புதுச்சேரி கமிட்டி இணைந்திருந்த போது தோழர்கள் டி.பி கோவிந்தன். கோவிந்தசாமி, வீரபத்திரன் உள்ளிட்ட தலைவர்களோடு பணியாற்றியவர் தோழா ராமமூர்த்தி. கட்சி பிரசுரங்களை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமல்லாமல் தத்துவார்த்த தளங்களிலும் விவாதம் செய்தவர். புதுச்சேரி மாநிலத்தின் கட்சியின் செய்திகளை கொண்டு செல்லும் வகையில் தனி பிரசுரம் அச்சடித்து வெளியிட வேண்டும் என்று எண்ணியவர். அவரது எண்ணப்படி மாதம் இரு முறையாவது செய்தி மடலை வெளியிட வேண்டுமென்று பிரதேசக் குழுவைக் கேட்டுக் கொண்டார்.
இப்படத்திறப்பு விழாவில் இந்திய கம்யூனி°ட் மாநில செயலாளர் நாரா. கலைநாதன், புரட்சிகர சோசலி°ட் கட்சியின் மாநில செயலாளர் லெனின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் பாவாணன், சட்டமன்ற உறுப்பினர் வி°வநாதன், கவுன்சிலர் தேவசகாயம், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன், கலிவரதன், முருகன், உலகநாதன், ராமசாமி, ராமச்சந்திரன், மறைந்த தோழரின் சகோதரர் பி. ரங்கநாதன், ஆ. தாமோதரன் உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த சிபிஎம் முதுபெரும் தலைவர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read more...

ஊழல்களைக் கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

0 comments



மத்திய காங்கிர° - திமுக அரசின் °பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டி ஊழல்களைக் கண்டித்து மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
புதுச்சேரி காங்கிர° அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வேட்டி சேலையினை கொள்முதல் செய்வதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். °பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடைப்பெற்றது.
முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு கட்சியின் நகர கமிட்டி உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் தா. முருகன், செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ், கிளை செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினார்கள். நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன், கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன், மது உள்ளிட்ட திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதேப்போல் சுதேசி மில் எதிரில் நடந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் பிரதேச செயலாளர் வெ. பெருமாள், சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்ற பேசினார்கள்.
படம் உள்ளது
Read more...
Wednesday, December 15, 2010

மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு அறிவித்த ரூபாய் ஆயிரமும் உடனே வழங்கக் கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது

0 comments
Read more...

பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி டிச 14
மழையால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15 ஆயிரம் வழங்ககோரி மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி - காரைக்காலில் பெய்த தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரி பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு *ரூபாய் பதினைந்தாயிரமும், வீடு இழந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு அறிவித்த ரூபாய் ஆயிரமும் உடனே வழங்கக் கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், பிரதேசக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, கலியன். முத்துலிங்கம், கலைச்செல்வி. சேகர், இளவரசி, சரவணன் உள்ளிட்ட கிளை செயலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
Saturday, December 11, 2010

Rainfall Benefit scheme used for voting projection

0 comments


Here in Puducherry state Rainfall Benefit scheme used for voting projection. All MLA's are distributing application in his own and they used for Advertisement purpose.
Read more...
Monday, December 6, 2010

தோழர் பி.ராமமூர்த்தி

0 comments

தோழர் பி.ராமமூர்த்தி 1955ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலையில் பணிபுரிந்த அவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் கட்சியிலும், விவசாய அரங்கத்திலும் அரும்பணியாற்றினார். 1957ம்ஆண்டு ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல் மாநில அரசு கொண்டுவந்த பாதகமான நிலச்சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி ஐந்து மாத காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறையில் தன்னுடன் இருந்த சில தலித் தோழர்களுக்கு சிறையிலிருந்து விடுதலையான பின்னர் பாராட்டுவிழா நடத்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதால் சாதி விலக்கம் செய்யப்பட்டார். அதன் விளைவாக அவரது சகோதரி திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.

புதுச்சேரி பிரதேசத்தில் 1974லிருந்து தீக்கதிர், செம்மலர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, சிந்தா, தேசாபிமானி போன்ற பத்திரிகைகளின் விற்பனை பொறுப்பை ஏற்று தனது கடைசிகாலம் வரை அதனை சிறப்புறச் செய்து வந்தார். தோழர் பி.ராமமூர்த்தி திருமணம் செய்துகொள்ளவில்லை. தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் தனக்கு கிடைத்த கணிசமான நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி பிரதேச குழுவிற்கும் விழுப்புரம் மாவட்டக்குழுவிற்கும் வழங்கியுள்ளார்.

ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டத்திலும், பின்னர் புதுச்சேரி பிரதேசத்திலும் கட்சி வளர்ச்சிக்காக அர்ப்பணிபோடு செயல்பட்டவர் தோழர் பி.ராமமூர்த்தி.அவரது மறைவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.
Read more...

டாக்டர் அம்பேத்கரின் 54 வது நினைவு தினம்

0 comments

புதுச்சேரி டிச 6
டாக்டர் அம்பேத்கரின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மார்க்சி°ட் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகம் எதிரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தமிழ்மாநில ஜி. ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் என். குணசேகரன், பிரதேச செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன், புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி, நிர்வாகி கொளஞ்சியப்பன், அருந்ததியர் சங்க நிர்வாகிகள் தவமணி, வாழுமுனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர். வி°வநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
(படம் உள்ளது)
Read more...

தோழர் பி. ராமமூர்த்தி உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

0 comments


புதுச்சேரி டிச 6
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முழுபெரும் தோழர் பி. ராமமூர்த்தி உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக் குழு உறுப்பினரும், முதுபெரும் தோழருமான பி. ராமமூர்த்தியின்(79) மறைவையொட்டி, ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகமான தோழர் நல்லசிவம் நினைவகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், மாநில குழு உறுப்பினர் என். குணசேகரன், தா. முருகன், தனசேகரன், ஆர். ராமமூர்த்தி, கடலுhர், விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் டி. ஆறுமுகம், ஜி. ஆனந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சிஐடியூ அகில இந்திய தலைவர் ஏ.கே. பத்மநாபன், தமிழ்மாநில நிர்வாகி கே. வைத்தியநாதன், சுகுமாறன், ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதா சுந்தர்ராமன் ஆகியோர் கைபேசி மூலம் பிரதேச செயலாளர் பெருமாளிடம் தங்களது இரங்களை தெரிவித்தனர்.
மேலும் சிபிஐ புதுவை சட்டமன்ற உறுப்பினர் ஆர். வி°வநாதன், அக்கட்சி நிர்வாகிகள் கீதநாதன், அபிஷேகம், சேது செல்வம், முன்னால் முதல்வர் என். ரங்கசாமி, காங்கிர° பிரதேசத் தலைவர் ஏ. வி. சுப்ரமணியன், பார்வர்டு கட்சியின் தலைவர் முத்து, குடியரசுக் கட்சி தலைவர் லயோன், அதிமுக செயலர் அன்பழகன், பாமக நிர்வாகி பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் தேவசகாயம். பா°கரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வர்க்கவெகுஜென இயக்கங்களை சேர்ந்தவர்களும் அவரது உறவினர்களும் பி. ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பி.ராமமூர்த்தி உடல், பவழகரஞ்சாவடி சுடுகாட்டில் இறுதி நிகழ்ச்சி நடைப்பெற்றது. மறைந்த தோழரது விருப்பப்படி கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், அவரது உடலுக்கு தீ மூட்டினார்.
பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு புகழாரம் சூட்டினார்கள். (படம் உள்ளது)
Read more...
Sunday, December 5, 2010

Red Salute to Comrade P Ramamoorthy

0 comments




மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முது பெரும் தோழரும் புதுச்சேரி பிரதேசக் குழு தோழருமான பி. ராமமூர்த்தி(79) காலமானார்.
சிபிஎம் புதுச்சேரி பிரதேசக் குழு அலுவலகத்திலேயே தனக்கான கட்சி பணியை ஆற்றி வந்த தோழர் பி. ராமமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் உடல் குன்றி காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அதனையடுத்து கட்சியின் பிரதேச அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. செங்கொடி போற்றப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வி. பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், நிலவழகன், முருகன், உலகநாதன், ராமசாமி மற்றும் பிரதேசக்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ், சங்கர், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், லெனின் துரை, இடை கமிட்டி செயலாளர்கள் மற்றும் வர்க்க வெகுஜென அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மறைந்த பி. ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பி. ராமமூர்த்தி மறைவையொட்டி, கட்சியின் கொடி அரைக் கம்பத்தில் மூன்று தினங்களுக்கு பறக்க விடப்படும். மேலும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் மற்றும் வர்க்க வெகுஜென இயக்கங்களின் நிகழ்ச்சிகளும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று பிரதேச செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மேலும் தோழர் பி. ராமமூர்த்தியின் இறுதி நிகழ்ச்சி, திங்கள் கிழமை காலை 11 மணிக்கு பவழகரஞ்சாவடி இடுகாட்டில் நடைபெற உள்ளது.
Read more...
Thursday, December 2, 2010

தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் திருக்காஞ்சி கிராமத்தில் இருந்து, வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் நோக்கி சவப்பாடை ஊர்வலம் நடத்தும் போராட்டம்

0 comments



புதுச்சேரி டிச 1
சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தர முடியாதது தான் தலித் மக்கள் உரிமையை பாதுகாக்கும் புதுச்சேரி அரசா? என்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியை அடுத்து வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சி, அக்ரகாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலனி மற்றும் ஊர் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றால் கிராமத்தை ஒட்டியுள்ள சங்கராபரணி ஆற்றைக் கடந்து அடக்கம் செய்ய வேண்டும். ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் நீச்சல் தெரிந்த 4 இளைஞர்கள் பிணத்தை வாழை மரத்தில் வைத்து அக்கரைக்கு இழுத்துச் சென்று இறுதி நிகழ்ச்சி செய்ய வேண்டும். எனவே கிராமத்திலேயே சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று பல நாள் கோரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தது.
இத்தகைய அவல நிலையை கண்டித்தும், ஆற்றில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன் வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் திருக்காஞ்சி கிராமத்தில் இருந்து, வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் நோக்கி சவப்பாடை ஊர்வலம் நடத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையல் புதன்கிழமை(டிச 1) திருக்காஞ்சி கிராமத்தில் கொட்டும் மழையில் தாரைத் தப்பட்டத்துடன் துவங்கிய போராட்டத்திற்கு சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா தலைமை தாங்கி பேசுகையில்,
தீண்டாமை ஒழிப்பு முன்னனி, தமிழகம் மற்றும் புதுவையில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. இப்பகுதியில் நீண்ட காலமாக சுடுகாடு இல்லாதது தெரிய வந்தது. சுடுகாட்டுக்கு பாதை இருக்கு, சுடுகாடு இருக்கிறது என்றே இன்றைய ஆட்சியாளர்கள் கூறிவரும் நிலையில் ஆற்றுக்கு அந்தப்பக்கம் சுடுகாடு உள்ள இடத்தில் கே° நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கி தர முடிகிறது. ஆனால் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் தலித் மக்களுக்கு சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தர முடியாதது தான் தலித் மக்கள் உரிமையை பாதுகாக்கும் அரசா? என்று புதுச்சேரி அரசை குற்றம் சாட்டினார்.
முன்னதாக இப்போராட்டத்திற்கு முன்னனியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி, சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் தலித் சுப்பையா, தவமணி, கொளஞ்சியப்பன், கலிவரதன், மணிபாலன்,இன்னரசு,ஜானகி, வாலிபர் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சரவணன் சிஐடியூ நிர்வாகிகள் நிலவழகன், சிவக்குமார், குணசேகரன், விவசாய சங்க நிர்வாகிகள் உலகநாதன், முருகையன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட துணை ஆட்சியர் உறுதி
புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியர் அருணாச்சலத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னனி நிர்வாகிகள் சந்தித்து பேசுகையில்: திருக்காஞ்சி குடியிருப்பு மக்களுக்கு மனைப்பட்டா வழங்கவும், சுடுகாட்டுக்கு ஆற்று மேம்பாலம் கட்டுவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு சில மாதங்களில் அதற்கான பணிகள் செய்ய ஆவண செய்யப்படும் என்றும் துணை ஆட்சியர் அருணாச்சலம் உறுதியளித்தார்.
இப்போரட்டத்தை யொட்டி திருக்காஞ்சி கிராமம் முழுவதும் போலிஸார் குவிக்கபட்டு இருந்தனர்.
படம் உள்ளது
Read more...
Monday, November 29, 2010

இலவச லுங்கி – சேலை மற்றும் சைக்கிள் கொள்முதல் செய்திருப்பதில் ஊழல் - கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி நவ 29
இலவச லுங்கி – சேலை மற்றும் சைக்கிள் கொள்முதல் செய்திருப்பதில் ஊழல் முறைகேடு குறித்து, புதுவை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இலவச லுங்கி சேலை கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் தரமற்றதை கொள்முதல் செய்திருப்பதில் முறைகேடுகள் குறித்து சமூகநலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்டுறவுத்துறை மூலமே இலவச திட்டங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி ஆம்ப+ர் சாலை சம்பா கோவில் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி பொறுப்பு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின் துறை முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பிரதேச குழு உறுப்பினர் பிரபுராஜ், கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன், ரமே~;, ராமசாமி, சேகர், மணவாளன், சரவணன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கொம்ய+ன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ராமசாமி, பிரதேச குழு உறுப்பினர் மணிபாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கமிட்டி உறுப்பினர்கள் ஐயப்பன், நமச்சிவாயம் மற்றும் ரத்தினவேல், பத்மநாபன், சண்முகம், இன்னரசு, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருபுவனை கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்க சிபிஎம் கொம்ய+ன் செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன், பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன், கமிட்டி உறுப்பினர்கள் ஆவணியப்பன், ராமமூர்த்தி, பெரியசாமி, அன்புமணி, ஆனந்தன், வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு கொம்ய+ன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் நிலவழகன், பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் வடிவேல், கலியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
புதுச்சேரியின் நான்கு மையங்களில் இப்போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...
Sunday, November 28, 2010

வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் காலனி மற்றும் ஊர் மக்கள்

0 comments

புதுச்சேரி நவ 26
புதுச்சேரி திருக்காஞசி கிராமத்தில் சுடுகாடு கேட்டு சவப்பாடை ஊர்வலம் தீண்டாமை ஓழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 1ல் நடைபெறுகிறது.
தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் புதுவை அமைப்பாளர் ஜி.ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு.
வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் காலனி மற்றும் ஊர் மக்கள், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும அவதியுறும் நிலை மாறவில்லை. சங்கராபரணி ஆற்றின் ஓரு கரையில் ஊர் குடியிருப்புகளும் அடுத்தகரையில் சுடுகாடும் இருந்தது. பல ஆண்டுகளாக மணல் கொள்ளைக்கூட்டம் சுரண்டிவிட்டதால் சுடுகாடு இருந்த இடம் நீர்ப்பிடிப்பு இடமாக மாறிவிட்டது. மேலும் ஆற்றின் குறுக்கே நீர்த்தடுப்பு அணை கட்டியுள்ளதால் வருடம் முழுவதும் ஆற்றின் நீர்ப்பிடிப்பு குறையாமல் உள்ளது. மழைக்காலம் வந்தால் வெள்ளம் கரைபுறண்டு ஓடும். இந்த நேரங்களில் இறந்தவர்களின் சடலங்களை டயர்(அ) வாழைமரத்தில் நீண்ட கயிற்றில் கட்டி, நீச்சல்தெரிந்த சிலர் மட்டும் இழுத்துச்சென்று அடக்கம் செய்கின்றனர். நலவசதிபடைதத சிலர் தங்கள் நிலத்தில் அடக்கம் செய்கின்றனர். வசதி படைத்ததவர்கள் நீர்படகுமூலம் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர். இதனால் ஓட்டுமொத்த
ஊர்மக்கள் பாதிக்கப்பட்டாலும் மிகவும் வறிய நிலையில் உள்ள தலித்மற்றும பிற்படுத்தப்பட்டோர் கடுமையான துன்பத்தை அனுபவிக்கின்றனர். எனவே மக்கள் வாழும் பகுதியிலேயே சுடுகாடு ஏற்பாடு செய்துதரக்கோறுகின்றோம்.
மேலும் பொது மக்கள் கழிப்பிட வசதியின்றி க~;டப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகாலை விடிவதற்குள் (அ) மாலை இருட்டியபிறகுதான் காலைக்கடன்களைக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதோடு அங்கு வசிக்கும் தலித் குடும்பங்களுக்கு குடிமனை கொடுக்கப்பட்டும் பட்டா கிடைக்கவில்லை. மேலும் தேவைக்கேற்ப புதிய குடிமனை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்து பேசியும் எந்தப்பயனும் இல்லை.
எனவே மேற்கண்ட கோரிக்கைகளை தீர்த்திடக் கோரி தீண்டாமை ஓழிப்பு முன்னணி சார்பாக சவப்பாடை ஊர்வலம் திருக்காஞ்சியில் துவங்கி வில்லியனுர் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐp.லதா தலைமை ஏற்க உள்ளார். இவ்வாறு ராமசாமி கூறினார். முன்னணி நிர்வாகிகள் கலிவரதன், தலித்சுப்பையா, தவமனி, மணிபாலன், ஜானகி ஆகியோர் உடனிருந்தனர்.
Read more...
Saturday, November 27, 2010

இலவச வேட்டி சேலை திட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும்

0 comments


புதுச்சேரி நவ 23
இலவச வேட்டி சேலை திட்டத்தில் முறைகேடு செய்த புதுச்சேரி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ. பெருமாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும்; தாண்டவமாடுகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் விதிமுறைகளை மீறி வருகிறது. இதனால் ஒரு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை வேறொன்றுக்கு திருப்பி விடுவது பல்லாங்குழி ஆட்டம் போல் உள்ளது.
மாநில துணை நிலை ஆளநர் ஜூலை 29, 2010ல் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சமூக நலத்துறையில் திட்டமதிப்பீட்டுத் தொகைக்கு மேல் ரூ. 1.74 கோடி கூடுதலாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு தெரியாமல் 2009-2010 நிதியாண்டின் முடிவில் கடைசி தேதியில் பணம் பெறப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விதி மீறல்கள் என எச்சரித்துள்ளார்.
இலவச வேட்டி சேலைத்திட்டத்திற்கு தேவையான துணிகள் கூட்டுறவு நெசவாலை கழகங்களிடம் இருந்து கடந்த காலங்களில் பெறப்பட்டது. தற்போது சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து துணிகளை கொள்முதல் செய்வதை ரத்து செய்து வெளிச் சந்தையில் வாங்கிட முடிவெடுத்து, நடப்பு ஆண்டிற்கு ரூ. 3.50 லட்சம் குடும்பங்களுக்கும், மாற்றுத்; திறனாளிகளுக்கும் ரூ. 480 வீதம் இலவச வேட்டி சேலை வாங்க தீர்மானிக்கப்பட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 10 நிறுவனங்களிடம் இருந்து ஏல ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு இருந்தது. இதில் இரண்டு நிறுவனங்களுக்கு உரிய சீல் இடப்பட்ட ஏல அறிவிப்பு ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டுள்ளது. மற்றநிறுவனங்களின் சீலிடப்பட்ட ஓப்பந்த அறிவிப்புகளை பிரித்துக் கூடபார்க்க வில்லை. தலைமைச் செயலாளருக்கு வந்தபுகாரின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரமற்ற துணி என கண்டறியப்பட்டுள்ளது.
அதேப் போல் இலவச சைக்கிள்திட்;டத்திற்க்கு தனியார் ஏஜன்சியிடம் கொள்முதல் செய்த சைக்கிளின் தரம் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்படி இரண்டு திட்டங்களிலும் மிகப்பெறும் ஊழல் நடந்திருப்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர் கந்தசாமி மற்றும அதிகாரிகள் ஆகியோர மீது துணை நிலைஆளுநர் சிபிஐ விசாராணைக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை அமல் படுத்துவதில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து நவம்பர் 29 துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பும் மற்றும் பாகூர்,மதகடிப்பட்டு, வில்லியனுர், காரைக்கால் ஆகிய மையங்களில் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு பெருமாள் கூறினார்.
Read more...
Monday, November 22, 2010

ரத்தக்களறிக்கு முடிவு கட்டுவோம் : புத்ததேவ் அறைகூவல்

1 comments

லங்கல்போடா (மே.வங்கம்), நவ.22-

மாவோயிஸ்ட்களின் துணையோடு மாநிலத்தின் பல பகுதிகளில் வெறியாட் டம் ஆடி வரும் திரிணா முல் காங்கிரசின் வன்முறை வெறிக்கும், ரத்தக்களறிக் கும் முடிவு கட்டுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யா அறை கூவல் விடுத்துள்ளார்.

வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள லங் கல்போடா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட் டார். இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 160 பேர் கொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் திரி ணாமுல் மற்றும் மாவோ யிஸ்ட் அமைப்பு ஆகிய இரண்டும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன.

முதல்வர் புத்ததேவ் பேச் சின் பகுதிகள் வருமாறு :

வடக்கு 24 பர்கானாவில் சசன், ஹரோவா, ராஜர் ஹாட், மினாகா மற்றும் பங்கோர் ஆகிய இடங் களில் கடந்த சில மாதங் களாகவே வன்முறை சம்பவ ங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் திரிணாமுல் காங்கிர சார் மற்றும் மாவோயிஸ்ட் கள் இணைந்து செயல் படுகின்றனர். சசன் பகுதி யில் உள்ள குண்டர்களின் பட்டியலைத் தயார் செய்யு மாறு மாவட்ட ஆட்சி யருக்கு ஏற்கெனவே உத்தர விட்டுவிட்டேன். சட்ட விரோதமாக குவித்து வைக் கப்பட்டுள்ள அனைத்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள் ளோம்.

ராஜர்ஹாட் திட்டம் தேசத்திற்கே பெருமை சேர்க்கும் திட்டமாகும். மாநிலத்தின் அந்தஸ்தை உயர்த்தியதோடு, மாநிலம் குறித்த கருத்தோட்டத் தையும் மாற்றியுள்ளது. இந் தப்பகுதியில் பத்து லட்சம் பேர் குடியிருப்பார்கள். கணினி நிறுவனங்கள், கல்வி மையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என்று அனைத்து வகையான ஏற்பாடுகள் இருக்கும். பெரிய தொழில் மையமாக ராஜர்ஹாட் உருவாகும் என்று குறிப்பிட்டார்.

கிழக்கு மிட்னாப்பூர் மற்றும் தெற்கு 24 பர்கானா ஆகிய இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகளிலும் திரி ணாமுல் காங்கிரசார்தான் பொறுப்பில் இருக்கிறார் கள். இரண்டு பஞ்சாயத்து களிலும் ஊழல் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதற்கு எதிராக கட்சியின் ஊழியர் கள் மக்களைத்திரட்டி போராட முன்வர வேண் டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
Read more...
Friday, November 19, 2010

புதுச்சேரி மூர்த்திகுப்பம் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பு

0 comments



புதுச்சேரி நவ 19
புதுச்சேரி மூர்த்திகுப்பம் கிராமத்தில் அமையவுள்ள மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மாரக்சிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர், அரசு சிறப்பு செயலாளர், மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சுற்று சூழல் துறையின் விஞ்ஞானி ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
புதுச்சேரி மாநிலம் மூர்த்திக்குப்பம் கடலோர கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க 2008 முதல் கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது. மேற்படி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவது அரசும் - தனியாரும் சேர்ந்தா (அ) தனியார் நிறுவனமா என்பது தெரியவில்லை. தேங்காய்திட்டு கிராமத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைந்ததால் குருசுகுப்பம், சோலைநகர் உள்ளிட்ட பலப்பகுதிகளில் கடல் நீர்பிடிப்பு அதிகரிப்பும், தமிழகப்பகுதியான கோட்டகுப்பம், முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பும், குடியிருப்புகள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை தடுத்திட தூண்டில் வளைவு வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். இதையொட்டி பாதிப்புகள் மூர்த்திக்குப்பம் மீன்பிடி துறை முகத்தால் ஏற்படுவதற்கு உள்ளது குறிததும், தேங்காய் திட்டு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ள போது 15 கி.மீ இடைவெளியில் மற்றொறு துறைமுகம் தேவையா என்பது குறித்து தெளிவுபடுத்தாமல் - வெளிப்படைத் தன்மையில்லாமல் மீன் பிடித் துறைமுகப் பணியை துவக்குவது ஏற்புடையதல்ல. மக்கள் வாழ்வுரிமையை பலவந்தமாக பறிக்கும் அணுகுமுறையாகும்.
மூர்த்திக்குப்பம் மீன்பிடித் துறை முகத்தால் மீனவ மக்கள், விவசாய மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். நிலத்தடி நீர் மாசுபடும், சுற்றுச்சூழல் பெரும் சேதாரத்திற்கும் உள்ளாகம். மீன்பிடித் துறைமுகம் அமையப்போவதால் ஏற்படும் பயனை விடவும் பல மடங்கு ஈடுசெய்ய முடியாத நீடித்த – சரிசெய்ய இயலாத கடும் பாதிப்பு மக்களுக்கு ஏற்படும் என அறிவியல் அமைப்புகள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. இத்தகைய ஆபத்துகள் குறித்து மாநில அரசு உண்மைத் தன்மையை ஓளிவு மறைவு இல்லாமல் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ஆகவே புதுச்சேரி அரசு மூர்த்திக்குப்பத்தில அமையப்போகும் மீன்பிடித் துறைமுகம் தொடர்பான தொழில் நுட்பசாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்திட வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்திட வேண்டும். அறிவியல் அமைப்புகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அளித்துள்ள புகார்கள் - பாதிப்புகள்குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிட உண்மை தன்மையை வெளியிடவும் வேண்டும். அதுவரையில் மீன்பிடித்துறைமுக கட்டுமானப் பணியை நிறுத்தி வைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கடசி வலியுறுத்துகிறது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்திடவும் மாநில அரசு முன்வரவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
Read more...

உண்ணாவிரதப் போராட்டம்

0 comments

புதுச்சேரி நவ 18
திருபுவனை ~ரோன் சொல்யூ~ன்ஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பில் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
~ரோன் சொல்யூ~ன்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்யப்பட்ட 15 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலையளித்திட வேணடும். தொழிலாளர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பொருமாள், சிஐடியூ நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், சிவக்குமார், உடல் உழைப்போர் சங்க செயலர் ராமசாமி ஆகியயோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். பிரேம்குமார், தீர்த்தமலை, பன்னீர்செல்வம், வீரமணி, சசிக்குமார் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Read more...
Tuesday, November 16, 2010

மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் குறித்து பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை: தூத்துக்குடியில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

0 comments


தூத்துக்குடி, நவ. 16-

அதிமுக நிலை குறித்த மார்க் சிஸ்ட் கட்சியின் தீர்மானம் குறித்து கருத்துகூறும் தகுதி திமுகவுக்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செவ்வா யன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறிய தாவது:-

காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அதிமுக கூறியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

இந்தத்தீர்மானம் ஆறுதல் அளிப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இந் தத் தீர்மானத்தில் மத்திய -மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கூற வேண்டிய கருத்தை கூற வேண்டிய நேரத் தில் எடுத்துரைக்க தயங்க மாட் டோம். அதே நேரத்தில் காங்கி ரசின் அனைத்து மக்கள் விரோ தக் கொள்கைகளையும் ஆதரிக் கும் திமுகவுக்கு இதுகுறித்து பேசும் உரிமை இல்லை.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசில் அங் கம் வகிக்கும் திமுக, பெட் ரோல், டீசல் விலை உயர்வு, உர விலை உயர்வு, சிமிண்ட் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதியால் நூல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங் களுக்கு அனுமதி அளிக்கும் முயற்சி, அந்நிய பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் முடிவு போன்ற அனைத்துக் கும் கண்மூடித்தனமாக ஆதரவு அளிக்கிறது. சில்லரை வர்த்தகத் தில் அந்நிய நிறுவனங்களை அனுமதித்தால் 8 கோடிப் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும். இத்தகைய கொள்கை களுக்கு கை தூக்கி ஆதரவு அளிக் கும் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர் மானம் குறித்து கருத்து கூறும் உரிமை இல்லை. காங்கிரஸ் தலைமையிலான அரசின் மக் கள் விரோத கொள்கைகளில் திமுகவின் நிலை என்ன என் பதை அவர்கள் முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக் கிய ஆ.ராசா சென்னையிலி ருந்து தில்லிக்கு புறப்படும் வரை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றார். ஆனால் தில்லிக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். வேறு வழியில்லை என்ற நிலை யில்தான் அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மத்திய புலனாய்வுத்துறையை கேள்வி கேட்கும் அதிகாரம் அந்தக்குழுவுக்கு கிடைக்கும். மேலும் தவறு எங்கு நடந்தது? யாருக்கு பலன் சென்றது என் பதையெல்லாம் வெளியில் கொண்டுவர முடியும்.

தமிழக மீனவர்களின் பிரச் சனைக்கு மத்திய-மாநில அரசு கள் தீர்வுகாண வேண்டும். இலங்கைக் கடற்படையின ரால் மீனவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடற்கரை மேலாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடற்கரை பகுதிகளை சுற்றுலாத்தலமாக் குவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு ஏற்படுவதோடு மீன் இன வளர்ச்சியும் பாதிக்கும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதி பர் ஒபாமா இந்தியா வந்தார். சில்லரை வர்த்தகம், உயர்கல்வி, நிதி, காப்பீடு போன்ற துறை களை அமெரிக்க நிறுவனங் களுக்கு திறந்துவிட வேண்டும் என்பதே அவரது வருகையின் நோக்கம் என்று அவர் குறிப் பிட்டார்.

தாமிரபரணியை பாதுகாப்போம்

தாமிரபரணி ஆறு குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தொடர்ந்து பயன்படவேண்டுமானால் இந்த ஆற்றில் 5 ஆண்டு காலம் மணல் அள்ளக்கூடாது என்று உயர்நீதிமன் றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு கறாராக செயல்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் படிப்படியாக தாமிரபரணி நீருக்கு பதிலாக கடல்நீரை சுத்திகரித்து தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்த முன்வரவேண்டும்.

வரும் டிசம்பர் 12ம் தேதி நதிநீர் பயன்பாடு, பாதுகாப்பு, சுற் றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் நிலைத்த தொழில் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது. இதில் அறிவியல் அறிஞர் கள், தொழில் வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
Read more...

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோரி

0 comments

புதுச்சேரி நவ 16
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோரி, புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கட்டுமானப் பொருட்களை குறைந்த விலையில் கூட்டுறவுத் துறை மூலம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களை முறையாக வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு மாத பென்~ன் தொகையாக ரூபாய் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு, தனியார் மூலமாக வரவேண்டிய செஸ் வரி வசூல் செய்து, வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
பழைய பேருந்து நிலையம் எதிரில் நடந்து ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ கட்டுமானப் தொழிலாளர் சங்க பிரதேச செயலாளர் கலியன் தலைமை தாங்கினார். சிபிம் பிரதேச செயலாளர் வி. பெருமாள், சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி. ராமசாமி, செயலாளர் கே. முருகன், நிர்வாகிகள் நிலவழகன், குணசேகரன், சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கொட்டும் மழையில் நடந்த இப்போராட்டத்தில் திரளான கட்டிடத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
படம் குறிப்பு: புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. செவ்வாயன்று மறைமலை அடிகள் சாலையில் பழ வியபாரிகள் குடை பிடித்த வண்ணம் வியாபாரம் செய்கின்றனர்.
Read more...

சிபிஎம் அறிக்கை

0 comments

புதுச்சேரி நவ 12
புதுச்சேரி காங்கிர° ஆட்சியில் விளையாட்டுத்துறை புறக்கனிக்ப்பட்டு வருகிறது என்று மார்க்சி°ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிபிஎம் புதுச்சேர் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- புதுச்சேரி மாநிலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அனுமதியோடு 1994ல் ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது. கால்பந்து, ஹாக்கி, கைபந்து, தடகள விளையாட்டு, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் திறன் உள்ளவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வருகிறது. புதுச்சேரியின் 4 பிராந்திய மாணவர்களும் தங்கி பயிற்ச்சி பெற்றுவரும் நிலையில் சுகாதாரமற்ற நிலையிலும் உப்பளம் விளையாட்டு மைதானம் உள்ளது. நாள் ஓன்றுக்கு ரூ.125விதம் உணவுக்காக அரசு ஓதுக்கிறது. ஆனால் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை அனைத்திலும் ஊழல் கேடுகளும் நீடித்து வருகிறது.
இதனால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதுடன் இந்திய அளவில் புதுச்சேரி மாணவர்களின் விளையாட்டு திறன் குறைந்து வருகிறது.
99ஆம்ஆண்டு கல்வித்துறை +மூலம் காலப்பட்டில் 25 ஏக்கர் நிலம் ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளிக்கு கையக படுத்தப்பட்டது. மேலும் அணைத்து விளையாட்டு வசதிகள் உள்ளடக்யி மாதிரி வரைப்படமும் பொது பணித்துறையினால் வெளியிடப்பட்டது. ஆனால் நிதி ஓதுக்கியும் இது நாள் வரை விளையாட்டு மைதானம் அமைக்கப்படவில்லை மறுபுரம் ஏனாம் பகுதியில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு திட்ட ஓதுக்கீடு ரூ.7.5 கோடி இதற்கு சுமார் 22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளிக்காக சுற்றுச்சுவர் கட்ட ஓதுக்கப்பட்ட ரூ 1 கோடியையும் ஏனாம் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஏனாம் பகுதியில் அமையஉள்ள விiயாட்டு அரங்கம் நீச்சல் குளம் ஆகியவை மார்க்சி°ட் கட்சி வரவேற்கிறது அதே நேரத்தில் நிலம் கையகப்டுத்தப்பட்டு 11 ஆண்டுகளாகியும் புதுச்சேரி காலப்பட்டில் அமைய உள்ள விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு நிதி ஓதுக்காதது விளையாடு வீரர்களை காங்கிர° அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே நான்கு பிராந்தியங்களிலும சம வளர்ச்சி ஏற்படுத்தபட வேணடும்.விளையாட்டு துறைக்கு ஓதுக்கப்பட்ட நிதி அந்த நிதியை செலவு செய்தது குறித்து மாநில துணை நிலைஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி கேட்டுகொள்வதோடு. இதற்கு எதிராக மாணவர்கள் அணைத்து இளைஞர் அமைப்புகளும் ஓன்றுபட்டு போராட முன் வர வேண்டும். இவ்வாறு பெருமாள் கூறியுள்ளார்.
Read more...
Tuesday, November 9, 2010

ஐந்து இடதுசாரி கட்சிகளின் சார்பில புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி நவ 8
இந்திய ஆசிய விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஐந்து இடதுசாரி கட்சிகளின் சார்பில புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்திய தொழில்துறையை கபலிகரம் செய்;ய வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்தும், போபால் வி~வாயு விபத்தின் குற்றவாளி ஆன்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திய- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும். ஈராக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் படையினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும.; என்பன கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணை செயலாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நாரா கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்) கட்சியின் மாநில பொதுசெயலாளர் சோ.பாலசுப்ரமணியன், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இப்போராட்டத்தில் ஐந்து இடதுசாரிகட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
Read more...
Saturday, October 30, 2010

ஒபாமா வருகைக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு நவ.8 - நாடு தழுவிய எதிர்ப்பு நாள் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் அணிதிரள அழைப்பு

1 comments

இந்திய மக்களின் அனைத்து நலன்களையும் சீர்குலைக்கும் விதத்தில், தனது ராணுவ வளை யத்திற்குள் கொண்டுவர நிர்ப்பந்தங்களைச் செலுத் தும் அமெரிக்க அரசின் ஜனாதிபதி பாரக் ஒபாமா வின் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் அணி திர ளுமாறு இடதுசாரி கட்சி கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரி கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

அமெரிக்க நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா, இந் தியாவிற்கு வருகிறார். முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதி பர் என்ற முறையிலும், நவீன பிற்போக்கு புஷ் ஆட்சி அகற்றப்பட்ட சூழ்நிலையி லும், ஆக்கபூர்வமான மாற் றங்கள் ஏற்படும் என்று எதிர் பார்ப்புகள் நிலவின. ஆனால் அது நடக்கவில்லை.

அவரது வருகையின் போது 2010 நவம்பர் 8 அன்று நாடு தழுவிய அள வில் எதிர்ப்புநாள் கடைப் பிடிக்க இடதுசாரிக் கட்சி கள் தீர்மானித்திருக்கின்றன. அமெரிக்கா, உலகளாவிய மேலாதிக்க வல்லமையை நிறுவுவதின் ஒரு பகுதியாக, நாடுகளின் உயர் தன்னா ளுமை மற்றும் பல்வேறு நாட்டு மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடிய வகையில் கொள்கைகளைப் பின் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை,இந்தியாவுடன் ராணு வத்தந்திரக் கூட்டணி வைத் திருக்கிறோம் என்ற பெய ரில் மக்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கை களை இந்தியா கடைப் பிடித்திட வேண்டும் என்று அரக்கத்தனமான முறையில் நிர்ப்பந்தித்துக் கொண்டி ருக்கிறது.

உலக அளவிலும், இந் தியாவிற்கு எதிராகவும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் செயல்கள் குறித்து, இந்திய ஆட்சியாளர்கள் கொண்டிருக்கும் கருத்துக் களுக்கு முரணாக, இடது சாரிக் கட்சிகள் நாட்டு மக் களில் பெரும்பான்மையோ ரின் கருத்துக்களை முன் வைத்திட விரும்புகிறோம்.

நவம்பர் 8 அன்று நடை பெறும் எதிர்ப்பு நாளன்று, இடதுசாரிக் கட்சிகள் கீழ்க் கண்ட பிரச்சனைகளைப் பிரதானமாக முன்வைக்கின் றன:

1. போபால் நச்சுவாயு விபத்தில் பலியானவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய இழப்பீட்டை அளித்திட வும், தொழிற்சாலை வளா கத்தைச் சுத்தப்படுத்தித்தர வும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அமெரிக்கா, விசாரணையை எதிர்கொள் வதற்காக வாரன் ஆண்டர் சனை அனுப்பி வைத்திட வேண்டும்.

2. இந்தியாவின் அயல் துறைக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்க மூலத னம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளைய டிப்பதற்காக வேளாண்மை, சில்லரை வர்த்தகம், கல்வி மற்றும் இதர சேவைகளைத் திறந்துவிட நிர்ப்பந்தம் அளிப் பதை நிறுத்த வேண்டும்.

3. இந்தியாவை, அமெ ரிக்காவின் ராணுவப் பங்கா ளியாக மாற்ற வகை செய் யும் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். அமெ ரிக்க அணு உலை விநியோ கஸ்தர்கள் மீதான பொறுப் புக்களைக் கைவிட வேண் டும் என்று இந்தியாவை நிர்ப்பந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

4. இராக்கில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மீத முள்ள 50 ஆயிரம் படை யினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சுயேச்சையான மற்றும் நடுநிலை அரசு அமையக் கூடிய விதத்தில் அரசியல் தீர்வு காண வேண்டும். அமெரிக்க - நேட்டோ படையினரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

5. கியூபா மீதான பொரு ளாதாரத் தடையை நீக்க வேண்டும். பாலஸ்தீனம் மற் றும் அரபு நிலப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிர மிப்புகளை விட்டு வெளியே றும் வரை இஸ்ரேலுக்கு அளித்திடும் அனைத்து உத விகளையும் நிறுத்தவேண்டும்.

நவம்பர் 8 அன்று மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், ஆர்ப்பாட்டங்கள் - பேரணி கள் நடத்திடுமாறு அனைத் துக் கிளைகளையும் இடது சாரிக் கட்சிகள் அறைகூவி அழைக்கின்றன. (ந.நி.)
Read more...
Saturday, October 23, 2010

திமுக அரசின் அடக்குமுறை தர்பாருக்கு கண்டனம் தமிழகம் முழுவதும் தொழிலாளர் தர்ணா

0 comments

தொழிலாளர்களின் உரிமைகளுக் காக போராடும் சிஐடியு தலைவர் களை கைவிலங்கிட்டு கைது செய்து சிறையில் அடைப்பதும், பொய் வழக்கு புனைவதுமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல் படும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித் தும், தொழிற்சங்க தலைவர்களை விடு தலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 23 சனிக் கிழமை பெருந்திரள் தர்ணா போராட் டம் நடைபெற்றன.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அழைப்பை ஏற்று நடை பெற்ற இந்த மாபெரும் போராட்டத் தில் மாநிலம் முழுவதும் பல்லாயிரக் கணக்கானோர் ஆவேசத்துடன் பங் கேற்று முழக்கமிட்டனர்.

திருப்பெரும்புதூரில் உள்ள பாக்ஸ் கான் ஆலையில் நியாயமான கோரிக் கைகளுக்காக போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்ட தமிழக அரசு, போராட்டத்திற்கு தலைமை யேற்று வழிகாட்டிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து சிறையிலடைத்தது.

சிறையிலிருந்து ஜாமீனில் விடு தலையான மறுநிமிடமே, அ.சவுந்தர ராசன், இ.முத்துக்குமார் மற்றும் 10 தொழிலாளர்கள் உட்பட 12 பேர் மீது மேலும் பொய்வழக்கு புனைந்து மீண் டும் சிறையில்தள்ளியது தமிழக அரசு. அதுமட்டுமின்றி, தொழிலாளர்களின் தலைவர்களான இவர்களை கை விலங்கு பூட்டி, உச்சநீதிமன்ற வழிகாட் டுதல்களை மீறி அப்பட்டமான மனித உரிமை மீறலை அரங்கேற்றியது.

தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறை அடக்குமுறையை ஏவி யுள்ள தமிழக அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து மாநிலம் முழுவதும் சனிக்கிழமை மாபெரும் பெருந்திரள் தர்ணா நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன இயக்கத்திற்கு சிஐடியு மாவட்டத்தலை வர் ஏ.வாசுதேவன் தலைமையேற்றார். மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தர ராசன், மாநிலச் செயலாளர் க.திருச் செல்வன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், வாலிபர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.கண் ணன், மாநிலச் செயலாளர் ஆர்.வேல் முருகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சிஐடியு மாநிலச்செயலா ளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்றி னார். எஸ்.வாசுதேவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரையில் நடைபெற்ற கண்டன இயக்கத்தில் மதுரை கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் பா.விக்ர மன், ஏஐடியுசி சார்பில் தினகரமோ கன், எம்எல்எப் சார்பில் மகபூப்ஜான் உள்ளிட்டோர் பேசினர். ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் ஆவேச முழக்க மிட்டனர்.

சென்னையில் நடைபெற்ற பெரும் இயக்கத்தில் சிஐடியு தலைவர்கள் மாலதி சிட்டிபாபு, ஏ.பி.அன்பழகன், வி.குமார், எம்.சந்திரன், எல்.சுந்தரரா ஜன், அப்புனு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

நாகர்கோவிலில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம் மது, சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஜாண் ஜோசப், சிஐடியு தலைவர்கள் கே.செல் லப்பன், பி.இந்திரா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினத்தில் சட்டமன்ற உறுப் பினர் வி.மாரிமுத்து, சிஐடியு நிர்வாகி கள் நாகை மாலி, ஆர்.ராமானுஜம், புவ னேஸ்வரி, சிவக்குமார், வெற்றி வேல் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.

கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருப்பூர் உட்பட தமி ழகத்தின் அனைத்து மாவட்டங்களி லும் எழுச்சியுடன் நடைபெற்ற இவ் வியக்கத்தில் ஏராளமான பெண்கள் செங்கொடி ஏந்தி பங்கேற்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. சிஐடியு மாநில பொருளாளர் பி.எம்.குமார் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் இவ் வியக்கத்தில் பங்கேற் றனர்.
Read more...
Thursday, October 14, 2010
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com