Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, December 20, 2011

உடல் உழைப்போர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா

0 comments

புதுச்சேரி,டிச-18
உடல் உழைப்போர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி பிரதேச உடல் உழைப்போர் சங்கம் சிஜடியு- வின் புதிய பெயர்பலகை திறப்பு விழா காந்திவீதி, முத்துமாரியம்மன் கோவில்வீதி சந்திப்பில் நடைபெற்றது.சங்கத்தின் பொருளாளர் கே.குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில் சங்கத்தின் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஏற்றிவைத்து பேசினார்.புதிய பெயர்பலகையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் தா.முருகன் திறந்து வைத்தார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.சிஜடியு மாவட்ட துணைத்தலைவர் ராஜாங்கம்,ஆட்டோ சங்க நிர்வாகிகள் மணவாளன்,மாதிவானன்,சிபிஎம் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.சங்க செயலாளர் ராமசாமி,நிர்வாகிகள் நாகமாணிக்கம்,சாதிக்பாஷா,சபாபதி,பாலையா,சரவணன்,பஸ்கர்,சங்கர்,மாலா உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக சங்கத்தின் அடையாள அட்டையும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.
Read more...
Friday, December 9, 2011

பெறுகியுள்ள வன்முறை சீரழிவுகளை தடுக்ககோரி

0 comments

புதுச்சேரி,டிச-9
பெறுகியுள்ள வன்முறை சீரழிவுகளை தடுக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல்துறை பாதுகாப்பில் இருந்த இளம் பெண் காணாமல் போன சம்பவத்திற்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் .இவ்வழக்கு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இளம் பெண்ணை பாலியலுக்கு உட்படுத்திய சம்பவத்தில் ஜி தங்கும் விடுதியின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். இரவு நேரக் சலையோர டிபன் கடைகளை இரவு ஒரு மணிவரை நடத்திவதற்கு அனுமதிக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்துள்ள கொலை,கொள்ளைகளை தடுக்கதவரிய காவல்துறையை கண்டித்தும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனைகுறித்து அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக முதல்வர் கூட்ட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நேருவீதி காந்திவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்த பேசினார்.இருதியாக போராட்டத்தை முடித்து வைத்து மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பேசினார்.இப்போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன்,கலிவரதன்,சுமதி,ராமசாமி,முருகன் இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,தமிழ்செல்வன்,சரவணன்,முருகையன், உள்ளிட்ட பிரதேசக்குழு ,இடைகமிட்டி உறுப்பினர்கள்,மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



புதுச்சேரி டிச-9
ஜிப்மர் மருத்துவனையின் புதிய இயக்குநராக டாக்டர். ரவிக்குமார் பொறுப்பேற்று கொண்டார்.புதுச்சேரி கோரிமேட்டில் தன்வந்திரி நகரில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை மத்திய சுகாதாரதுறையின் கீழ் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையின் இயக்குநராக இருந்த டாக்டர்.சுப்பாராவ் ஓய்வு பெற்றதை தொடர்ந்து டாக்டர்.ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் மருத்துவகல்லுhரியில் பணிபுர்ந்தவர்.மருத்துவத்துறையில் பல்வேறு புத்தகங்களை எழுதி விருதுகளை பெற்றுள்ளார்.புதனன்று (டிச-7) டாக்டர்.ரவிக்குமார் ஜிப்மர் இயக்குநராக பொறுப்பேற்று கொண்டார்.இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

தோழர் பி ஆர் நினைவு அஞ்சலி

0 comments

புதுச்சேரி டிச-8
அந்நிய பல்கலைகழகத்தை இந்திய நாட்டில் அனுமதிப்பதை எதிர்த்து பாலிக்டெக்னிக் மாணவர்கள் புதுச்சேரியில் வகுப்புகளை புறக்கனித்து போராட்டம் நடத்தினர்.
இந்திய உயர்கல்வியில் அந்நிய நாட்டு பல்கலைகழகத்தை அனுமதிக்கும் மசோதாவை மத்திய அரசு திரும்பபெறவேண்டும்.இந்திய பல்கலைகழகங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.அடிப்படை கல்வி வளர்சிக்கு போதுமான நிதியை ஒதுக்கி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு இலா°பேட் மோதிலால்நேரு பாலிடெக்னிக் சங்க கிளை தலைவர் வினோத் தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித்குமார்,இணைசெயலாளர் பார்த்தசாரதி, பாலிடெக்னிக் கிளை நிர்வாகிகள் கலைவாணன்,வேல்முருகன்,பாரதிராஜ,அருண்,சூர்யா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக வாகுப்புகளை புறக்கனித்து ஊர்வலாமாக சென்ற மாணவர்கள் நேதாஜி சுபா° சந்திரபோ° சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் உள்ளது.

புதுச்சேரி,டிச-8
இளம் பெண் கணாமல் போனது குறித்து புதுச்சேரிஅரசு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
புதுச்சேரி மாநிலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும், சீண்டல்களும் அதிகரித்து வருகிறது.மாநில அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு அதிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நட்சத்திர ஓட்டல் கட்டினால் ஒருகோடி மானியம் அளித்து வருகிறது.ஒருபுறத்தில் சொர்க்கபுரி போன்ற தோற்றமும், மறு புறத்தில் வளர்ந்து வருகிற வறுமையும், சீரழிவு கலாச்சாரத்திற்கு அடிப்படை காரணமான அமைந்துள்ளன.இதன் வெளிப்பாடாக அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் ரம்யா (எ)க°துhரி 16-வயது நிரம்பிய இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழிலுக்கு கட்டாயபடுத்திய விவகாரத்தில் விடுதிமேலாளர் உள்ளிட் 4பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில் காவல்துறை கட்டுபாட்டில் இருந்த ரம்யாவிற்கு மருத்துவபரிசோதனை செய்ய அரசு மருத்துவனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.அப்போது திடிரென்று ரம்யா வை காணவில்லை என்று காவல்துறை சேர்ந்த பெண் காவலர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட ரம்யா எங்கு உள்ளார் என்பது கேள்விகுறியாக உள்ளது.எனவே இவ்வழக்கு குறித்து நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.இளம் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் சார்பில் முதுநிலை கண்கானிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.தற்போது மூன்று மாதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் தேர்தல் துறை ஆனையர் நியமிக்கபடாதது புதுச்சேரி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய போரட்டம் நடத்தபடும்.
மேலும் புதுச்சேரி அரசுக்கு வரவேண்டிய பல்வேறு திட்ட நிதியை மத்திய காங்கிர° ஆட்சி =தடுத்து வருகிறது.எனவே இதுகுறித்து மாநில முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் .இவ்வாறு கூறினார்கள்.உடன் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,மாதர் சங்க செயலாளர் இ.சத்யா ஆயியோர் உடன் இருந்தார்.

புதுச்சேரி,டிச-8
துணைத்திட்ட நிதியின் கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் முதல்வர் என்.ரங்கசாமியிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தல்.
தலித் மக்களுக்கே துணைத்திட்ட நிதியை முழுவதும் செலவு செய்ய வேண்டும்.தலித் மாணவர்கள் விடுதியை உரிய முறையில் பாரமரிக்க வேண்டும்.தலித்மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மாண்யம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் தலித்சுப்பையா,பொதுசெயலாளர் ராமசாமி,பொருளாளர் கொளஞ்சியப்பன்,நிர்வாகிகள் கலிவரதன்,நிலவழகன்,முருகன்,நடராஜன்,சரவணன்,தவமணி உள்ளிட்டோர் முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை சாசனத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர்.மேலும் அமைச்சர்கள் சந்திரகாசு,ராஜவேலு,பன்னீர்செல்வம்,ஆகியோரையும் சந்தித்து வலியுறுத்தினர்.
படம் உள்ளது
Read more...
Friday, December 2, 2011

பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனை வழங்ககோரி

0 comments

புதுச்சேரி,நவ-30,
பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனை வழங்ககோரி மார்க்சி°ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்த உண்மை குற்றவாலிகளை கைது செய்ய வேண்டும்.விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து மாவட்ட ஆட்சியர் தலமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளை கண்கானித்து பாலியல் வண்முறைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரசெயலாளர் எ°.லெனின்துரை தலமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ்,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜ்,சந்துரு,குப்புசாமி,பா°கர்,மாதர் சங்க நிர்வாகி ஜெயலக்°மி உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

அமைப்புசாரா தொழிலாளர்களை அலட்சியப்படுத்தும் புதுச்சேரி அரசு.

0 comments

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி விடுதலை பெற்றது.அதனால் இந்த பிரதேசம் மத்திய அரசின் மேற்பார்வையில் யூனியன் பிரதேசமாக இன்றுவரை இருந்து வருகிறது.மத்திய அரசின் நிதி உதவி அதிகம் இருந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் எந்த வித கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்த வில்லை இருந்த ரோடியர்,சுதேசி,பாரதி என மூன்று பஞ்சாலைகளில் மூன்று ஷிப்ட்டுகளாக பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இதன் மூலம் புதுச்சேரியின் பொருளாதாரம் அதைச்சுற்றி சுயதொழில்களும் வளர்ந்து வந்தன உலகமயம், தாராளமயம் என்ற பெயரால் பஞ்சாலைகளில் இன்று சில நுhறு தொழிலாளர்களே வேலை செய்கிற அவள நிலை உள்ளது. இந்த பஞ்சாலைகளை நவினப்படுத்தி அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் எண்ணம் மத்திய மாநில அரசுகளுக்கு இல்லை. மறுபுறம் புதுச்சேரியில் விவசாய விலை நிலங்கள் அழிக்கப்பட்டு ரியல் எ°டேட், வீட்டு மனை என்ற பெயரால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விட்டன. சின்ன தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்ட பாகூர் ,கிருமாம்பாக்கம் போன்ற மூன்று போகங்கள் விலையகூடிய நிலம் உள்ள பகுதிகள் இன்றைக்கு வீட்டு மனைகளாக மாற்றபடுகிறது.
அரிசிக்கு பக்கத்து மாநிலத்தில் கையேந்துகின்ற புதுச்சேரி அரசு இந்த விவசாய்களை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை.நில பாதுகாப்பு சட்டத்தை அமுலபடுத்தி விவசாய விலை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவும், மானியவிலையில் உரங்கள் கொடுத்து இந்த விவசாய்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு தவறிவிட்டது.விவசாயம்,பஞ்சாலை போன்ற தொழில்கள் அழிக்கப்பட்டதால் இந்த தொழிலாளர்கள் எல்லாம் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.இந்த தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை சொல்லி மாலாது.காலை 9மணி முதல் இரவு 10 மணிவரை கடைகளில் வேலை செய்யும் இத்தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை வாரவிடுமுறையும் இல்லை சுதந்திரதினம் போன்ற நாட்களிலுல்கூட இவர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது. 50வயதானல் வீட்டிற்கு செல்ல வேண்டியது தான். எத்தனை ஆண்டுகள் வேலை செய்து இருந்தாலும் எந்த பண உதவியும் கிடையாது.புதுச்சேரியின் தொழிலாளர்துறை ஒன்று இருக்கிறது வாரவிடுமுறை இல்லை என்று சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமால் அந்த கடை உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கின்றது . இந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது கடினம் தொழிற்சங்கம் என்று கேள்விபட்ட உடன் அந்த தொழிலாளிக்கு மறுநாள் வேலை கிடையாது.சுயமாக தொழில் செய்யும் நடைபாதை வியாபாரிகள், தெருவில் கூவி விற்கிற தொழிலாளிகள்,ஆட்டோ தொழிலாளர்கள் இவர்களின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது.காவல்துறை இவர்களை நாய்களை விட கேவலமாக நடத்துகிறது அன்னியர்களைப்போல இங்கே கடைபோடதே, ஆட்டோவை அங்கே நிறுத்தாதே என்று சுயமாக தொழில் செய்பவர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து வருகிறது காவல்துறை.
இந்த தொழிலாளர்கள் சிஜடியு சங்கம் அமைத்து தங்களை பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள்.புதுச்சேரியில் பெரும்பகுதியான அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாக்க இந்த அரசும் தொழிலாளர் நல சட்டங்களையும் அமுலபடுத்த வில்லை. கேரளாவைப்போல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் கேட்டு போராடியதின் விலைவாக 2001ஆம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலச்சங்கம் ஏற்படுத்தப்பட்டது.இன்று 16 வகையான தொழில்செய்யகூடியவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.வீட்டு வேலை செய்யும் பெண்கள் நலச்சங்கத்தில் சேர்க்கபட வேண்டும் என்று சிஜடியு சங்கம் வீட்டு வேலை செய்யும் பெண்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் புதுச்சேரி அரசு அவர்களை நலச்சங்கத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து இன்று வரை அமல்படுத்தாமல் இருக்கிறது.நலச்சங்கத்தில் 62 வகையான தொழில்கள் சேர்க்கபடவேண்டும் என்று சிஜடியு தொடர்ந்து போராடி வருகிறது.நலச்சங்கதின் மூலம் இன்று சிறிதலவு நிவாரணம் பெறுகிறார்கள் கல்வி உதவிதொகை, மரணகால நிதி, குழந்தை பிறந்தால் நிதிஉதவி என்று கிடைக்கிறது.சிஜடியு சங்கத்தின் போராட்டம் மூலம் தீபாவளி ஊக்கதொகை ரூ.300ம் பிறகு ரூ.400, தற்போது ரூ.500 என பெற்றுவருகிறோம்.நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நீதி ஒதுக்க வேண்டும் என்று சிஜடியு தலைமையில் புதுவை பிரதேச உடல் உழைப்போர் சங்கம் போராடி வருகிறது.அமைப்பு சாரா நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளிக்கு வங்கி கடன்,சிகப்பு ரேஷன் கார்டு வழங்கவேண்டும்.ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாண்ய விலையில் பெட்ரோல் வழங்கவேண்டும் என தொடர்ச்சியாக போராடிவரும் சிஜடியு சங்கத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி 20வது மாநாட்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

இவன்
கே.குமார்(பொருளாளர்)
புதுவை பிரதேச உடல்உழைப்போர் சங்கம் (சிஜடியு)
புதுச்சேரி
Read more...
Wednesday, November 9, 2011

மறியல் போராட்டம்

0 comments


புதுச்சேரி,நவ-8
விலைவாசி உயர்வுக்கேற்றவாறு குறைந்த பட்ச ஊதியம் ரூ.10ஆயிரம் வழங்க கோரி சிஜடியு,ஏஜடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் ஏழு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நிரந்தர வேலையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிப்பதை கைவிட்டு நிரந்த தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும்.போனஸ்,வருங்கால வைப்பு நிதிக்கு ஊதிய உச்சவரம்பு நிர்ணயிப்பதை ரத்து செய்யபட வேண்டும்.அனைத்த தரப்பட்டவர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட ஓப்வூதியம் வழங்க வேண்டும்.விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும்.உயர்த்தியுள்ள பெட்ரோல் விலையை திரும்ப பெற வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடந்த மறியல் போராட்டத்தில் சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஜடியுசி மாநிலபொதுசெயலாளர் அபிஷேகம்,ஏஜசிசிடியு நிர்வாகி சங்கரன்,எல்பிஎப் நிர்வாகி ஆறுமுகம்,பிஎம்எஸ் நிர்வாகி இளங்கோ ஆயியோர் முன்னிலை வகித்தனர்.சிஜடியு தமிழ்மாநில செயலாளர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் நகரசெயலாளர் பிரபுராஜ் உள்ளிட்ட 65பெண்கள் உட்பட 270 பேர் மறியலில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்தனர்.முன்னதாக பெரியார் சிலை எதிரே இருந்து ஊர்வலமாக வந்து கைதானர்கள்.
இராஜிவ்காந்தி சதுக்கம்
இராஜிவ்காந்தி சதுக்கத்தில் நடந்த மறியல்போராட்டத்தில் சிபிஜ தேசிய குழு உறுப்பினர் விசுவநாதன்,நகர செயலாளர் சேதுசெல்வம்,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை உள்ளிட்ட 63பெண்கள் உட்பட 230பேரை போலிஸார் கைது செய்தனர்.இதேபோல் வில்லியனூர்,பாகூர்,கண்ணிகோயில்,அரியாங்குப்பம்,கரிகலாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடந்த மறியல்போராட்டத்தில் சிஜடியு நிர்வாகிகள் ராமசாமி,நிலவழகன்,உலகநாதன்,குணசேகரன்,சிவக்குமார்,பத்மநாபன்,தமிழ்செல்வன்,முருகையன் ஏஜடியுசி நிர்வாகிகள் கீதநாதன்,ராமமூர்த்தி,யுடியுசி தலைவர் லெனின்,டியுசிசி நிர்வாகி முத்து உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானர்கள்.இப்போராட்த்தில் ஜஎன்டியுசி கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

புதுச்சேரி பாகூர் கொம்யூன் குழுவின் புதிய அலுவலக திறப்பு விழா

0 comments

புதுச்சேரி அக்-31
ஊழலில் திலைத்துள்ள காங்கிரஸ்-பாஜக விற்கு மாற்றாக மார்க்சி°ட் கட்சி மக்களின் துருவ நட்சத்திரமாக திகழ்கிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பாகூர் கொம்யூன் குழுவின் புதிய அலுவலக திறப்பு விழா பகூரில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கொம்யூன் குழு செயலாளர் சீ.பத்மநாபன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.பாகூர் சரஸ்வதி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள எஸ்.வீரபத்திரன் நினைவு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில்,
புதுச்சேரின் நெற்களஞ்சியமாக விலங்கும் பாகூரில் இன்றைக்கு உழைக்கும் மக்களுக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் மார்க்சி°ட் கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் ,ஆதர்ஸ் குடியிருப்பு,அலைகற்று ஊழல் என அடுக்கடுக்கான ஊழலில் சிக்கியுள்ள மத்திய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும்,பாஜகவின் கர்நாடக முன்னால் முதல்வர் எடியூரப்பா தனக்கு சொத்து சேர்த்த வழக்கில் இன்றைக்கு சிறைக்கு தள்ளாப்பட்டுள்ளார்.ஆனால் அக்கட்சியின் தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்திவருவது யாரை ஏமாற்றுவதற்காக.இந்த இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் மார்க்சி°ட் கட்சி துருவ நட்சத்திரமாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
காங்கிர° கட்சியின் தவறான பொருளாதாரகொள்கையால் நாட்டில் இரண்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தி இன்றைக்கு பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.இதில் பெரும்பாலும் விவசாயிகள் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி உள்ளது.எனவே தான் விவசாய நிலங்களை விலைநிலங்களாக மாற்றபடுவதை தடுக்க வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி வலியுறுத்திவருகிறது.மேலும் சமிபத்தில் தமிழக முதல்வரை சந்தித்து தொழில் கொள்கைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அரசின் சார்பில் நிலபயண்பாடு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.அதேப்போல் புதுச்சேரி அரசு நில பயண்பாட்டு கொள்கையை உருவாக்க வேண்டும்.இல்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய கொள்கையை உறுவாக்கும் என்றார்.
விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் விவசாயிகள்,தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே மத்திய ஆட்சியாளர்களின் தவறான கொள்கையை கண்டித்து நவம்பர் 1முதல் 7வரை நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.இவ்வியக்கத்தில் புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.
எண்.குணசேகரன்
கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைவர்கள் படத்தை திறந்து வைத்து பேசுகையில்,பல கட்சிகளின் தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்று இருப்பது மார்க்சி°ட் கட்சிக்கு தனி மரியாதை உள்ளது என்பதை எடுத்து காட்டுகிறது.இந்த நிலை தமிழகத்தில் பார்க்க முடியாது.பாகூரில் பலதரப்பட்ட மக்களிடமும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது.மக்கள் நலனை பாதுகாக்க போர் வீரரை போலவும், விவசாயிகளின் தகவல் சுரங்கமாகவும் இவ்அலுவலகம் செயல்படும்.
இத்திறப்பு விழாவில் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,புதுச்சேரி மின்சாரதுறை அமைச்சர் டி.தியாகராஜன்,முன்னால் அமைச்சர் வெங்கடசாமி,கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,கலிவரதன்,ராஜாங்கம்,ராமசாமி,முருகன், ராமச்சந்திரன்,உலகநாதன், உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்களும் பொதுமக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
Read more...
Saturday, October 29, 2011

மருத்துவமனையை நவீன படுத்த கோரி

0 comments
Read more...

உழவர்கரை மாநாடு

0 comments


புதுச்சேரி அக்-16
மின்சார கட்டண உயர்வை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது உழவர்கரை நகரகமிட்டி மாநாடு பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது.கோடிஏற்றத்ததுடன் துவங்கிய மாநாட்டில் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பங்கேற்று துவக்கவுரையாற்றினார்.கமிட்டி செயலாளர் எஸ்.லெனின்துரை வேலைஅறிக்கையை சமர்பித்தார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன் ராஜாங்கம் ,கே.முருகன்,ராமசாமி மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.வாழ்த்தி பேசினார்கள்.இருதியாக மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் பிரதேசசெயலாளர் வெ.பெருமாள் பேசினார்.
இம்மாநாட்டில் புதிய உழவர்கரை நகரகமிட்டி செயலாளராக மீண்டும் எஸ்.லெனின்துரையும்,கமிட்டி உறுப்பினர்களாக நடராஜன்,ராமச்சந்திரன்,சத்தியா, ,சந்துரு,சேகர்,குப்புசாமி,குணசேகரன், பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மின்துறை கடந்த ஏப்ரல் 2010ம் ஆண்டிலிருந்து ,மின்நுகர்வோர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இதுநாள் வரைக்கான மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு 34.25காசு என கணக்கிட்டு தவனைமுறையில் கூடுதலாக வசூல் செய்வதை புதுச்சேர அரசு உடனடியாக கைவிட வேண்டும்.லாஸ்பேட்டை அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாமிப்பிள்ளை தோட்டத்தில் உள்ள வெள்ளவாரியை துhர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
Read more...
Friday, October 28, 2011

மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி மின்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments

புதுச்சேரி அக்-24
மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி மின்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் கடந்த 7 மாதத்தில் பயண்படுத்திய மின்சாரத்திற்கு கூடுதலாக ஒரு யூனிட் ஒன்றுக்கு 34.25காசு உயர்த்தி மின்நுகவோர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மின்துறை உத்தரவை உடணடியாக திரும்ப வேண்டும்.மின்துறையில் ஏற்படும் இழப்பை கோடிகணக்கில் மின்பாக்கிவைத்துள்ள பெரிய நிறுவணங்களிடம் இருந்து வசூலித்து ஈடு செய்ய வேண்டும். மின்சார பற்றாக்குறையை போக்க மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெறவேண்டும்.மின்துறையில் மின்இழப்பை சரிசெய்ய புதிய டிரான்பார்ம்களை அமைத்து தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள துணைமின்துறை அலுவலம் எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலமை தாங்கினார்.தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் மது,மதிவாணன்,மணவாளன்,சரவணன்,உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பாகூர்பாகூர் மேற்கு வீதியில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கொம்யூன்செயலாளர் எஸ்.பத்மநாபன் தலமை தாங்கினார்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,விவசாய சங்க தலைவர் ஜி.ராமசாமி ,கட்டுமான சங்க பொதுச்செயலாளர் கலியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் முத்துலிங்கம்,சாம்பசிவம்,சரவணன்,செல்வராஜ்,வடிவேலு உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உழவர்கரை
சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கட்சியின் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சத்தியா,சந்துரு,பா°கர்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக மின்துறையை கண்டித்து அகல்விலக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Read more...

மாஹே அரசு மருத்துவனையை நவீன படுத்த வேண்டும்

0 comments

புதுச்சேரி அக்-22
மாஹே அரசு மருத்துவனையை நவீன படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளுர் இடைகமிட்டி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளுர் இடைகமிட்டி மாநாடு பள்ளுhரில் நடைபெற்றது.இம்மாநாட்டை கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கி வைத்து பேசினார்.கமிட்டி செயலாளர் ஜனார்த்தனன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார்.மாநாட்டை கேராள மாநிலக்குழு உறுப்பினர் கே.கே.ராகேஷ் முடித்து வைத்து பேசினார்.
மாநாட்டில் புதிய இடைகமிட்டி செயலாளராக ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் பள்ளுர் இடைகமிட்டி உறுப்பினர்களாக சுரேந்திரன்,நாராயணன்,கங்காதரன்,பாபு,அஜிந்தன்,தாமோதரன்,பிரவீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாஹே அரசு கல்லுhரியில் புதிய படப்பிரிவுகளை துவக்க வேண்டும்.கேரளாவில் உள்ளதைப்போல் நலவாரியங்களை துவக்க வேண்டும்.கேரளாவில் வழங்கபடுகின்றதைபோல் புதுச்சேரி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பண்டங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
Read more...
Saturday, October 15, 2011

மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சரை பதவியிலிருந்து நீக்ககோரி

0 comments

புதுச்சேரி அக்-14
மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சரை பதவியிலிருந்து நீக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டட்ம நடைபெற்றது.
10ஆம் வகுப்பு தேர்வில் மோசடியில் ஈடுபட்ட புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கண்டித்தும்.மாணவர் மற்றும் ஆசிரியர் சமூகத்திற்கும் ,மாநிலத்தின் மக்களுக்கும் பெரும் இழிவை ஏற்படுத்திய கல்வித்துறை அமைச்சரை உடனடியாக முதல்வர் ரங்கசாமி அப்பதவிலிருந்து நிக்க வேண்டும்.கடந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் மீது சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,முருகையன்,லெனின்துரை,மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

அமைப்புசார தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்க கோரி

0 comments

அமைப்புசார தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்க கோரி புதுச்சேரி சட்டமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோ,கட்டுமாணம்,சுமைப்பணி,வீட்டுவேலைசெய்யும் பெண்தொழிலாளர்கள் உள்ளிட்ட அiப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கதொகை ரூ.2ஆயிரம் வழங்கவேண்டும்.நலச்சங்த்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.வீட்டுவேலை செய்யும் பெண்களை அமைப்பு சார நலச்சங்கத்தில் உறுப்பினராக்க வேண்டும்.படிவம் வழங்கிய அணைவரையும் கட்டுமான நலவாரியம்,அமைப்பு சாரா நலச்சங்கத்தில் உறுப்பினராக்க சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சிவக்குமார்,கலியன்,சுமதி,ராமசாமி,மது,மதிவாணன்,உள்ளிட் திரளான முறைசார தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக பழைய பேரூந்து நிலையம் எதிரிலிந்து ஊர்வளமாக சென்று சட்டமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைச்சரிடம் மனு
பின்னர் தொழிலாளர்துறை அமைச்சர் ராஜவேலு வை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.மனுவை பெற்றுகொண்ட அமைச்சர் அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.
Read more...

புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு

0 comments
புதுச்சேரி அக்-12
போக்குவரத்து வரத்து நெரிசலை முறைபடுத்த வேண்டும் என கட்சியின் புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது புதுச்சேரி நகரகமிட்டி மாநாடு பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது.மாநாட்டை துவக்கிவைத்து கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் போசினார்.மாநாட்டு அறிக்கையை கமிட்டி உறுப்பினர் எம்.பி.மதிவாணன் வாசித்தார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கே.முருகன்,எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.மாநாட்டை நிறைவு செய்து சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசினார்.
இம்மாநாட்டில் புதிய நகரகமிட்டி செயலாளராக என்.பிரபுராஜ் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் நகரகமிட்டி உறுப்பினர்களாக சுமதி,மதிவாணன்,மணவாளன்,மது,துரைமுருகன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ் உள்ளிட்ட 9பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை காலம் கடத்தாமல் உடனே நடத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும்.நகர பகுதியில் ஏழைமக்களுக்கு அடுக்கு மாடிகுடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
Read more...
Monday, October 3, 2011

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

0 comments

புதுச்சேரி அக்-3
அரியாங்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.அரியாங்குப்பம் மருத்துவமனையை மேம்படுத்தி 24 மணிநேரமும் மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும்.வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் .மனைப்பட்டா இல்லா மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும், அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.அரியாங்குப்பம் ஆர்.கே.நகரில் நடந்த இப்பொதுக்கூட்டத்திற்கு கே.ஜெகதீசன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தமிழ் மாநிலகுழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் பிரபுராஜ்,மதிவானன்,சிவசோலை,கலியமூர்த்தி உள்ளிட்ட திரளானேர் பங்கேற்றனர்.



புதுச்சேரி அக்-3
சர்வதேச நடவடிக்கை தினத்தை யொட்டி சிஜடியு,ஏஜடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் .கூட்டு பேரம் கூட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.தொழிற்சங்க,ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.நாளொன்றுக்கு 7மணிநேரமும்,வாரத்திற்கு 5நாட்கள் மட்டுமே வேலை என்பதை உத்தரவாத படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி அக்டோபர் 3ல் சர்வதேச நடவடிக்கை தினத்தில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடந்த இப்போராட்டத்திற்கு ஏஜடியுசி மாநில செயலாளர் வி.அபிஷேகம் தலைமை தாங்கினார்.சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஜஎன்டியுசி தலைவர் ஆர்.பலராமன்,ஏஜசிசிடியு துனைதலைவர் சங்கரன்,பிஎம்எஸ் தலைவர் பி.ராமச்சந்திரன்,யுடியுசி செயலாளர் வி.சந்திரசேகரன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
படம் உள்ளது
Read more...
Saturday, October 1, 2011

நடைபாதை வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையை அமல்படுத்த வேண்டும்

0 comments

புதுச்சேரி செப்-27
நடைபாதை வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசை சிஜடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுவை நகர நடைபாதை மற்றும் சன்டே மார்க்கெட் சிஜடியு வியாபாரிகள் சங்கத்தின் பேரவைக்கூட்டம் சங்க தலைவர் டி.எஸ் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இப்பேரவையில் சங்கத்தின் கவுரவத் தவைவர் தா.முருகன்,சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,இணைசெயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.சங்கத்தின் செயலாளர் அழகர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பாலாஜி,வடிவேல் உள்ளிட்ட திரளான நடைபாதை வியாபாரிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு கடந்த 2004 ஆண்டு நடைபாதைவியாபாரிகளை பாதுகாக்க தேசிய கொள்கையை வகுத்துள்ளது.அதில் இவ்வியாபாரிகளுக்கு மின்சாரம்,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிபடை வசதிகளை நிறைவேற்றி பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தொழிற்சங்க பிரதிநிதிகள்,காவல்துறை,நகராட்சி,வங்கி அதிகாரிகள் கொண்ட அமைப்புக்குழு ஏற்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது.இந்த கொள்கையின் சுற்றரிக்கையை புதுச்சேரி தலைமை செயலாளருக்கு அனுப்பட்டுள்ளது. எனவே தேசிய கொள்கையின் பரிந்துரைகளை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளை கைவிட வேண்டும் .முறைசார தொழிலாளர்களுக்கு தீபாவளி பன்டிகைக்கான ஊக்க தொகை ரூ.2ஆயிரம் வழங்க வேண்டும்.சிஜடியு சார்பில் அக்டோபர் 11ல் சட்டமன்றம் நோக்கி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இப்பேரவையில் நிரைவேற்றப்பட்டது.
Read more...
Friday, September 30, 2011

பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையை கண்டித்து

0 comments

புதுச்சேரி செப்-18
பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அனுசரிக்க சென்ற தலித் மக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியதை கண்டித்தும்.துப்பாக்கிசூடு நடத்த காரணமான உயர் காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். பலியான 7 தலித் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரியும் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரிகாந்தி வீதி-நேருவீதி சந்திப்பில் நடந்த இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,தீன்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவை தலைவர் ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,இடைகமிட்டி செயலாளர்கள் உலகநாதன்,முருகையன்,லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன்,மாதர் சங்க தலைவர் தெய்வானை,செயலாளர் சத்தியா உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.
Read more...

தீண்டாமை ஒழிப்பு முன்னணி

0 comments


புதுச்சேரி செப்-24
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரபடுத்தும் என்று பி.சம்பத் பேசினார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி முதல் மாநில மாநாடு நவீனா கார்டன் திருமான நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு தலைக்குழு உறுப்பினர்கள் எல்.கலிவரதன்,தலித்சுப்பையா,பூ.மூர்த்தி,கே.முருகன்,எல்.லெயோன்,ஆனந்தராசன்,என்.வத்சலா ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.மாநாட்டு வரவேற்ப்புக்குழு தலைவர் வி.பெருமாள் பிரதிநிதிகளையும்,தலைவர்களையும் வரவேற்று பேசினார். தீண்டாமை ஒழிப்பு +முன்னணியின் தமிழ்மாநில தலைவர் பி.சம்பத் பட்டியலின துணைத்திட்ட நிதி கோரிக்கை சாசனத்தை வெளியிட்டும் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில்,
எங்கெல்லாம் தலித் மக்கள் பாதிக்கபடுகிறார்களோ அங்கெல்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களை முன்னணி நடத்தி வந்துள்ளது.சிதம்பரத்தில் நந்தனார் கோவிலில் நடந்து சென்ற பாதையை இன்னும் ஆதிக்கசாதியினர் அடைத்து வைத்துள்ளனர்.தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நந்தனாரை ஆதிக்கசாதியினர் தீயில் எரித்துவிட்டு அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்று கூறினார்கள்.ஆதிக்கசாதியினரால் மூடப்பட்ட நந்தனார் சென்ற கோவில் பாதையை திறக்ககோரி போராட்டம் நடத்திவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அப்பாதையை ஆட்சியாளர்கள் திறக்க வில்லை என்றால் இடித்து நொருக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சாதிய சமூகத்தில் இந்திய சமூகம் சிக்கியுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சித்தர்கள் வாழ்ந்த தமிழகத்தில் அப்போதே சாதிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தார்கள்.இந்திய நாடு விடுதலைக்கு பிறகு நம்மை ஆண்ட காங்கிர° கட்சியும் பெரியார் வழியில் வந்த திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் இன்னும் சாதிய கொடுமைகள் நடந்துதான் வருகிறது. தாழ்த்தபட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் சாதிய ஒடுக்குமுறைகளுக்குள்ளாவது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. எனவே சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னேடுத்து செல்லும் என்று பேசினார்.
மாநாட்டின் அறிக்கை அமைப்பாளர் ஜி.ராமசாமி வாசித்தார்.பொருளாளர் என்.கொளஞ்சியப்பன் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். பல்வேறு அமைப்புகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
Read more...
Tuesday, August 23, 2011

எம்.கே.பாந்தே மறைவையொட்டி புதுச்சேரியில் இரங்கள் கூட்டம்

0 comments


புதுச்சேரி =ஆக 21

சிஜடியு ஸ்தாபக தலைவர்களுள் ஒருவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான எம்.கே.பாந்தே மறைவையொட்டி புதுச்சேரியில் இரங்கள் கூட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,ஏஜடியுசி மாநில பொதுச்செயலாளர் அபிஷேகம்,டியுசிசி தலைவர் முத்து,யுடியுசி தலைவர் சம்பத்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் சி.எச்.பாலமோகனன்,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தலைவர் கொளஞ்சியப்பன்,எல்ஜசி ஊழியர் சங்க தலைவர் ராம்ஜி,மற்றும் சிஜடியு நிர்வாகிகள் நிலவழகன்,ராஜாங்கம்,சிவக்குமார்,பாபு உள்ளிட்ட திரளானோர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு மறைந்த தலைவர் எம்.கே.பாந்தே அவர்களின் உருவபடத்திற்கு மலர்துhவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

Read more...

பாகூரில் கட்டுமான தொழிலாளர்கள் பேரணி - மாநாடு

0 comments








புதுச்சேரி ஆக 22

முறைச்சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி BONUS ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

சிஜடியு புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 2வது பிரதேச மாநாடு பாகூரில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். மாநாட்டு பிரதிநிதிகளை நிர்வாகி சேகர் வரவேற்றார்.முன்னதாக சங்கத்தின் கொடியை இனைசெயலாளர் ஜெசதீசன் ஏற்றிவைத்தார்.இம்மாநாட்டை சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள் துவக்கிவைத்து பேசினார்.சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி மாநாட்டை வாழ்த்தி பேசினார்.சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் கலியன் சமர்பித்தார்.இருதியாக சிஜடியு தமிழ்மாநில தலைவர் ஆர்.சிங்காரவேல் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.மாநாட்டில் சிஜடியு நிர்வாகி சிவக்குமார்,சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,உள்ளிட்ட திரளான கட்டுமான தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.முன்னதாக அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5ஆயிரம் சிங்காரவேல் அவர்களிடம் வழங்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய தலைவராக நிலவழகன்,பொதுச்செயலாளராக கலியன்,பொருளாளராக செல்வராசு உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மாணங்கள்

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,முறைச்சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பன்டிகையோட்டி ரூ.2ஆயிரம் போன° வழங்க வேண்டும்.கட்டுமான பொருட்களின் விலை உயர்வை மாநில அரசு கட்டுபடுத்த வேண்டும்.அத்திய வாசிய பண்டங்களின் விலைஉயர்வை மத்திய,மாநில அரசுகள் கட்டுபடுத்த வேண்டும்.தொழிலாளர் ஆலோசனை வாரியத்தில் சிஜடியு விற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.விலைநிலங்களை பாதுகாக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 10ஆம் தேதி சட்டமன்றத்தை நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more...

பிரதமரையும் உளளடக்கிய லோக்பால்

0 comments




புதுச்சேரி ஆக 19

பிரதமரையும் உளளடக்கிய லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தாக்கல் செய்கின்ற லோக்பால் மசோதவில் பிரதமரையிம் விசாரணைக்கு உட்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதபோராட்டம் நடத்திய அன்னாஹசாரேயை வலுகட்டாயமாக கைது செய்த மத்திய அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதியில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார்.சிஜடியு ஆட்டோ சங்ககவுரத்தலைவர் தா.முருகன்,மாவட்ட தலைவர் ராமசாமி,அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ஆனந்தராஜ்,பொதுச்செயலாளர் புகழேந்தி,அறிவியல் இயக்கத் தலைவர்கள் தட்சணாமூர்த்தி,ராமச்சந்திரன்,பிஎ°என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் கொளஞ்சியப்பபன்,எல்ஜசி ஊழியர் சங்க தலைவர் ராம்ஜி,சிஜடியு நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன்,சீனுவாசன்,குணசேகரன்,சிவக்குமார்,உள்ளிட்ட திரளான தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று ஊழலுக்கு எதிராகவும், மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.



புதுச்சேரி ஆக 19

முத்தியால்பேட்டையில் அடிப்படைபிரச்சனைகளை தீர்க்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

ஹிரங்கவிலாஸ் தோட்டத்தில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கவேண்டும்.உடனடியாக அப்பகுதியில் பொதுகழிவரை கட்டி கொடுக்கவேண்டும்.சின்னாத்தா அரசு பள்ளி மதில் சுவரை உயரபடுத்த வேண்டும்.மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள சாராயகடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெற்றது.

மணிகூண்டு எதிரில் நடந்த இக்கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் ரா.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் சீனுவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சந்துரு,கமிட்டி உறுப்பினர் ரமேஷ்,உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

படம் உள்ளது



1. சிபிஎம் புதுச்சேரி உழவர்கரை நகரகமிட்டி சார்பில் சேகரிக்கப்பட்ட 36 தீக்கதிர் ஆண்டு சந்தாவும், 2 ஜந்தாண்டிற்கான சந்தா தொகையையும் சேர்த்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் இடம் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை வழங்கினார்.அருகில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கலிவரதன்,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சத்தியா,பா°கர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.



Read more...
Thursday, August 18, 2011

துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் உரையை கண்டித்து வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு கண்டன போராட்டம்

0 comments


புதுச்சேரி ஆக 18

புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் உரையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு கண்டன போராட்டம் நடைபெற்றது.

கருப்புபண பதுக்கள் பேர்வழி ஹசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் எடுக்க உதவிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளநர் இக்பால்சிங் சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசிப்பதை கண்டித்தும், இக்பால்சிங்கை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் சுனாமி குடியிருப்பு களை கட்டியதில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டில் சிபிஜ யால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ராகேஷ்சந்திராவை உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கோரி மார்க்சி°ட் கட்சி சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

அண்ணாசிலை எதிரில் இருந்து துவங்கி சட்டமன்றத்தின் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் தலைமை தாங்கினார்.சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன்,தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,முருகன்,கலிவரதன்,நிலவழகன்,உலகநாதன் இடைகமிட்டி செயலாளர்கள்,பிரதேசக்குழு உறுப்பினர்கள்,உள்ளிட்ட திரளான கட்சி உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கம் மிட்டனர்.

முன்னதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஆளுநர் இக்பால்சிங்,மாவட்ட ஆட்சியர் ஆகியோரது உருவபடங்களுடன் வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாக வந்த போது சிபிஎம் தொன்டர்களிடம் இருந்து காவல் துறையினர் ஆளுநர்,ஆட்சியரின் உருவபடங்களை வலுகட்டாயமாக பிடுங்கினார்கள்.பிடுங்கிய படங்களை பத்திரமாக காவல்துறை வாகனத்தில் எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

0 comments


புதுச்சேரி ஆக 14

புதுச்சேரி காந்திவீதியில் நடந்த தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கிவைத்து பேசினார்.இவ்வியக்கத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,முருகன்,நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ்,சுமதி மற்றும் சிஜடியு நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,மற்றும் மணவாளன்,ரமேஷ்,சரவணன்,முகவர்கள் மனவாளன்,ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read more...

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையோடு கூடுதல் சுயாட்சி அதிகாரம் கோரி

0 comments


புதுச்சேரி ஆக 10

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையோடு கூடுதல் சுயாட்சி அதிகாரம் கோரி மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் நான்கு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சே மீது ஜ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடுகளை இழந்த 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போரட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி அண்ணாசாலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.உழவர் கரை நகர செயலாளர் லெனின்துரை முன்னிலை வகித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்.மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினகள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானேர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

பாகூர்

பாகூர் மேற்கு வீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.வில்லியனூர் கமிட்டி செயலாளர் முருகையன் முன்னிலைவகித்தார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மதகடிப்பட்டு

மதகடிப்பட்டு கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன்,ராமசாமி,கொம்யூன் செயலாளர் உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இதில் பிரதேசக்குழு,கொம்யூன்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.இதேப்போல் காரைக்காலில் நடந்த போராட்டத்திற்கு வட்டச்செயலாளர் வின்சென்ட் தலைமை தாங்கினார்.
Read more...
Thursday, August 4, 2011

சிறப்புக்கூறு திட்ட நிதி முழுமையும் தலித்மக்களின் மேம்பாட்டிற்கே செலவு செய்திடக்கோரி

0 comments

புதுச்சேரி ஆக 3
சிறப்புக்கூறு திட்ட நிதி முழுமையும் தலித்மக்களின் மேம்பாட்டிற்கே செலவு செய்திடக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலித் சிறப்புக்கூறு துணைத்திட்டநிதியை வேறுத்திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.2010-2011 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையை தலித் மாணவர்களுக்கு உடணடியாக வழங்க வேண்டும்.வீடுகட்டும் மானியம் உள்ளிட்ட தலித் மக்கள் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.கடந்த 10ஆண்டுகளாக சிறப்புக்கூறு திட்ட நிதி அமலாக்கம் குறித்து புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு நடந்த போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவைத்தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்கண்டன உரையாற்றினார்.இப்போராட்டத்தில் முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் தலித்சுப்பையா, பொருளாளர் என்.கொளஞ்சியப்பன், கலிவரதன்- விதொச,முருகன்-சிஜடியு,நிலவழகன்,பத்மாநாபன்-விவசாயிகள் சங்கம்,சந்துரு-டிஒய்எப்ஜ,ஆனந்து,ரஞ்சித்-எ°எப்ஜ உட்பட வெகு ஜன இயக்கங்கிளின் தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இருதியாக துறையின் இயக்குநர் அன்பழகனை சந்தித்து தலைவர்கள் மனு அளித்தனர்.மனுவை பெற்று கொண்ட இயக்குநர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும். அதேப்போல் மற்றதிட்டங்களையும் விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
Read more...
Tuesday, August 2, 2011

ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற் சங்க மையம் சிஜடியு சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

0 comments

புதுச்சேரி ஜூலை 30
ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற் சங்க மையம் சிஜடியு சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
எட்டு மணிநேர வேலை உரிமையை அமல் படுத்தக்கோரி 1936 ஆம் ஆண்டு ஜூலை 30ல் போராட்டம் நடத்திய புதுச்சேரி சவானா ஆலை (சுதேசி பஞ்சாலை) தொழிலாளர்களில் 12 தொழிலாளர்களை பிரேஞ்சு ராணுவம் சுட்டு கொன்றது.மறைந்த அத்தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 30 தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி கடலுhர் சாலையில் அமைந்துள்ள ஜூலை 30 தியாகிகள் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்சிக்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சிவக்குமார்,குணசேகரன்,சீனுவாசன்,ரவிச்சந்திரன்,கலியன்,சுமதி,நாராயணன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read more...

ஊழலை தடுக்க வலுவான லோக்பால் சட்டம் உருவாக்ககோரி

0 comments

புதுச்சேரி
புதுச்சேரி தபால் நிலையம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஆனந்து,மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரசெயலாளர் லெனின்துரை ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன் தர்ணாவை துவக்கி வைத்து பெசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,சிபிஜ தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன் ஆகியோர் பேசினார்கள். இடது சாரிகட்சி தலைவர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சீனுவாசன்,பிரபுராஜ்,சலீம்,சேதுசெல்வம்,பூபதி,சரளா உள்ளிட்ட திரளானோர் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
மதகடிப்பட்டு
மதகடிப்பட்டு கடை தெருவில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார்.சிபிஜ திருபுவனை தொகுதி செயலாளர் டி.பி.ரவி முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியோர் பேசினார்கள்.இத்தர்ணாவில் திரளான இடது சாரிகட்சியினர் பங்கேற்றனர்.
பாகூர்
பாகூர் கடைத்தெருவில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.சிபிஜ பாகூர் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் அபிnஷ்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.தமிழ்ச்செல்வன்,ராஜா உள்ளிட்ட திரளான இடதுசாரிகட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
வில்லியனூர்
வில்லியனூர் தென்கோபுர வீதியில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஜ தொகுதி செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார்.சிபிஜ மாநில செயற்குழு உறுப்பினர் இராமமூர்த்தி,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஜி.ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.மணிபாலன்,அந்துவான் உள்ளிட்ட இரு கட்சிகளை சேர்ந்த திரளானோர் இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி முழுவதும் நடந்த இத்தர்ணா போராட்டத்தில் ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நீதித்துறையின் உயர்மட்டத்தில் ஊழலை தடுக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும்.2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழலில் தொடர்புள்ள அமைச்சர்கள் அதிகாரிகளை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.தேர்தல்களில் பணபலத்தை தடுக்க விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும்.வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கியுள்ள கருப்பு பணத்தை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன கோரிக்கைகள் ஊழலுக்கு எதிரான இத்தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Read more...
Wednesday, July 13, 2011

கருப்பு கொடியுடன் போராட்டம்

0 comments

புதுச்சேரி ஜூலை 12
புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங்கை திரும்பப்பெறக்கோரி கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள குதிரை பன்னை வியாபாரி ஹசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதும்.அதேப்போல் ஆளுநர் மகன்கள் இடம்பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு அதிகாரத்தை தவறாக பயண் படுத்தி காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்குவதற்கு விண்ணப்பித்த மூன்றே நாளில் தடையில்லா சான்றிதழ் வழங்கிய குற்றத்திலும் புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற்று வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ரூ 300கோடிக்கு கழிவுநீர் வாய்க்கால் பணி அமைக்க தவராண நிறுவணத்திற்கு ஆளுநர் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்று இருப்பதை கண்டித்தும்,டெல்லியில் உள்ள புதுச்சேரி அரசினர் விருந்தினர் மாளிகைளில் பல அறைகளை ஆளுநரின் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும் ஆளுநர் இக்பால்சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடிகாட்டும் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கைது
புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு கொடியுடன் போராட்டம நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன்,முருகன்,உலகநாதன்,இடைகமிட்டி செயலாளர்கள் சீனிவாசன்,லெனின்துரை,பத்மநாபன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன்,தமிழ்ச்செல்வன்,மணிபாலன்,பிரபுராஜ்,உள்ளிட்ட 120பேரை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைதுசெய்து பின்னர் விடுவித்தனர்.முன்னதாக கருப்புபேட்ஜ் அணிந்து கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்த மார்க்சி°ட் கட்சியின் தலைவர்கள்,தொன்டர்களை ஆளுநர் மாளிகை அருகில் காவல்துறையினரால் தடுத்து நிருத்தி கைது செய்தனர்.
Read more...
Tuesday, July 12, 2011

தண்டோர போட்டு புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம்

0 comments

புதுச்சேரி ஜூலை 9
கருப்பு பண மோசடி மன்னன் ஹசன்அலிக்கு போலி பாஸ்பார்ட் வழங்க பரிந்துரைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி துனைநிலைஆளுநர் இக்பால்சிங்கை மத்திய அரசு உடனே திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு ஜூலை 12ல் கருப்பு பேட்ஜ் அனிந்து போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விலக்கி தண்டோர போட்டு புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது.பிரச்சாரத்தில் சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நிலவழகன்,ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டன
Read more...
Thursday, July 7, 2011

புதுச்சேரி கவர்னரை நீக்ககோரி

0 comments

புதுச்சேரி ஜூலை 6
புதுச்சேரி கவர்னரை நீக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு பேட்ஜ் அனிந்து போராட்டம் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது,
கருப்பு பணமோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள குதிரை பண்ணை வியாபாரி அசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாள் விசாரித்தனர்.இந்நிலையில் கவர்னர் குற்றவாலி என்பது நிருபணமாகியுள்ளது.மேலும் தனது மகன்கள் இடம்பெற்றுள்ள சவுத் டிரஸ்டிக்கு காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்க தனது அதிகாரத்தை தவராகபயன்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.மேலும் அரசுவிதிமுறைகளை மீறி கவர்னர் மருத்துவகல்லுhரி துவங்ககுவதற்கு உடந்தையாக இருந்த தலைமை செயலாளர் சந்திரமோகன் கல்லுhரி துவங்க அனுமதி அளித்துவிட்டு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய முன்னால் முதல்வர் வி.வைத்தியலிங்கம் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துவதோடு.மேலும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவர்னரை உடணடியாக நீக்கக்கோரி குடியரசு தலைவர்,உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி,மத்திய உள்துறை அமைச்சகம்,தலைமை ஊழல் கண்கானிப்பாளர் ஆகியோர்களுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கவர்னர் இக்பால்சிங்கை நீக்ககோரி ஜூலை 8 ஆம்தேதி புதுச்சேரி காரைக்காலில் தன்டோர போட்டு பிரச்சாரம் செய்யப்படும் அதனை தொடர்ந்து ஜூலை 12 ல் கவர்னர் மாளிகை முன்பு கருப்பு பேட்ஜ் அனிந்து கண்டன ஆர்ப்பாட்டமும் கட்சியின் சார்பில் நடைபெறுகிறது இவ்வாறு கூறினார்கள்.
Read more...

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கொலை வெறி தாக்குதலை கண்டித்து

0 comments

புதுச்சேரி ஜூலை 5
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கொலை வெறி தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் தெரு முனைப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதரவோடு ஆட்சி பொருப்பேற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 40 நாட்களில் 20க்கும் மேற்பட்ட மார்க்சி°ட் ஊழியர்களை படுகொலை செய்துள்ளதை கண்டித்தும்.கொள்ளப்பட்ட ஊழியர்களின் குடுபங்களை பாதுகாக்க பொதுமக்களிடம் நிதி திரட்டும் இயக்குமும் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நகரகமிட்டி சார்பில் நேருவீதி காந்திவீதி சந்திப்பில் துவங்கிய பிரச்சாரத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,கமிட்டிஉறுப்பினர்கள்,கிளைசெயலாளர்கள் மதிவானன்,ரமேஷ்,சிவசோலை,அழகர்ராஜ்,துரைமுருகன்,மணவாளன்,சரவணன்,பாலாஜி,முன்னா,சிஜடியூ இணைச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
காந்திவீதியில் துவங்கிய நிதி திரட்டும் இயக்கம் பு°சிவீதி,அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
உழவர்கரை
உழவர்கரை நகர கமிட்டி சார்பில் பெத்துசெட்டி பேட்டையில் நடந்த நிதி திரட்டும் இயக்கத்திற்கு கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி வசூல் இயக்கத்தை துவக்கிவைத்தார்.கமிட்டி உறுப்பினர் நடராஜன் மற்றும் சத்தியா,பாஸ்கர்,முருகதாஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
Read more...
Sunday, July 3, 2011

இடதுமுன்னணி மீதான வன்முறையை நிறுத்துக! மம்தா அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம்

0 comments
சென்னை, ஜூலை 2-

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் மீது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்கள் நடத்தி வருவதைக் கண்டித்தும், அதனை எதிர்கொண்டு உறுதியோடு போராடி வரும் இடதுமுன்னணியின் தோழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடுதழுவிய இயக்கம் வெள்ளியன்று (ஜூலை 1) தொடங்கியது.

சென்னையில் இந்த பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மக்கள வைக்குழுத் தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா எம்.பி. பேசினார்.

சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன், பார்வர்டு பிளாக் மாநிலச் செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ, தென் சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ் எம்எல்ஏ, வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

தமிழகம்முழுவதும் ஒருவார காலம் நடைபெறும் இந்த இயக்கத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கருத்தரங்குகள், பேரணி, ஆர்ப்பாட்டம் என பல வடிவங்களில் இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு இதுவரை மம்தா கட்சியினரும் மாவோயிஸ்டு களுமாகச் சேர்ந்து சுமார் 400 தோழர்களின் உயிரைப் பறித்துள்ளனர்.அவர்களது குடும்பங் களைப் பாதுகாப்பதற்கான நிதி திரட்டலும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இப்பிரச்சார இயக்கத்தையொட்டி, மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணியினர் மீது கொடிய வன்முறையை ஏவியிருப்பதன் மூலம் ஜனநா யகத்தின் மீது மம்தா அரசு நடத்தும் தாக்குதலை விவரித்து கட்சியின் சார்பில் பிரசுரம் வெளி யிடப்பட்டுள்ளது.

நாடு தழுவிய இந்த இயக்கம் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா,ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ் தான், ஜம்மு-காஷ்மீர், அசாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் துவங்கியுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற இயக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் உத்தவ் பர்மன் பங்கேற்று உரையாற் றினார். இவ்வியக்கத்தைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் அரசின் காவல்துறையினர் முயற் சித்தனர்.

பஞ்சாபில் பல்வேறு நகரங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. மகில்பூரில் நடைபெற்ற பேரணியில் மாநில செயற்குழு உறுப்பினர் ரகுநாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read more...

AIAWU pressures Puducherry Government to implement Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (NREGS)

0 comments
Read more...
Tuesday, June 28, 2011

புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி ஜூன் 27
டீசல்,சமையல் கியாஸ்,மண்ணென்னை விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிக்கக்கூடிய பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடணடியாக திரும்ப பெற வேண்டும்.எண்ணை விலை நிர்னைக்கும் உரிமையை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த இப்போராட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,ராமசாமி,கலிவரதன்,உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி செயலாளர்கள் சீனுவாசன்,பத்மநாபன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன்,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ்,கொளஞ்சியப்பன்,சங்கர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.
படம் உள்ளது
Read more...
Saturday, June 25, 2011

CITU and All workers Associatons joint Demonstration - Puducherry

0 comments

CITU and All workers Associatons joint Demonstration against petrol price hike in Puducherry
Read more...
Monday, June 20, 2011

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து

0 comments

புதுச்சேரி ஜூன் 17
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஜடியூ சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிர° கட்சி ஆட்சி பொறுப்பெற்ற ஒரு மாதத்தில் 12க்கும் மேற்பட்ட சிஜடியூ தொழிலாளர்களையும்,தலைவர்களையும் கொள்ளப்பட்டதை கண்டித்தும்.தொழிற்சங்க அலுவலகங்களை திரிணாமுல் காங்கிரஸ் அரசின் தயவோடு அக்கட்சி குண்டர்கள் தாக்கிவருவதை கண்டித்தும்.அரசியல் ரீதியான வன்முறைக்கு மாநில அரசு உடணடியாக முற்றுபுள்ளி வைக்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.
அண்ணாசாலை பிலால் ஓடடல் அருகில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியூ மாவட்டத்தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சிஜடியூ நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், சிவக்குமார்,குணசேகரன்,சீனுவாசன்,சுமதி,பாபு,கலியன்,உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Read more...
Monday, June 6, 2011

கூட்டுறவு இயக்கத்தை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும்

0 comments

புதுச்சேரி ஜூன் 5
கூட்டுறவு இயக்கத்தை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டும் என புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி கூட்டுறவு சங்க ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் ரோஷ்மா திருமணமண்டபத்தில் கூட்டுறவு இயக்கத்தை காப்பாற்றிட ஊழியரின் பணிநிலைமைகள் மேம்பட என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.சங்க கொடியேற்றத்துடன் துவங்கிய கருத்தரங்கத்திற்கு சம்மேளனத் தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார்.அமைப்புச்செயலாளர் புருnஷ்hத்தம்மன் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசினார் அப்பொது கூட்டுறவு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தனது அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.முன்னதாக தமிழ்நாடு கூட்டுறவு தொழிலாளர்கள் சம்மேளனம்(சிஜடியூ) பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி,சிஜடியூ புதுவை கூட்டுறவு சங்க கவுரவத்தலைவர் தா.முருகன்,அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தவைர் பாலமோகனன்,தலைவர் ஆனந்தராசன்,பொதுச்செயலளர் புகழேந்தி துணைபொதுச்செயலாளர் பிரேமதாசன் ஆகியோர் கருத்தரங்கத்தை வாழ்த்தி பேசினார்கள்.
திரளான ஊழியர்கள் பங்கேற்ற கருத்தரங்கத்தில் கூட்டுறவு சங்க ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு விற்பனை வரி விளக்கு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிரைவேற்றப்பட்டது
Read more...

சோஸலிச சமூகத்தை அமைப்பதற்க்காகவே இந்திய தொழிற்சங்க மையம் துவக்கப்பட்டது

0 comments

புதுச்சேரி ஜூன் 2
சோஸலிச சமூகத்தை அமைப்பதற்க்காகவே இந்திய தொழிற்சங்க மையம் துவக்கப்பட்டது என்று சிஜடியூ தமிழ்மாநில துணைபொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார்.
சிஜடியூ வின் 40வது ஆண்டு நிறைவு விழா புதுச்சேரி சிஜடியூ மாவட்டக்குழு சார்பில் ரெட்டியார் பாளையத்தில் நல்லசிவம் நினைவரங்கத்தில் கொண்டாடபட்டது.இவ்விழாவிற்கு சங்கத்தின் புதுவை மாவட்டத்தவைர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சங்கத்தின் துணைத்தலைவர் நிலவழகன் சிஜடியூ கொடியை ஏற்றி வைத்தார்.மறைந்த தலைவர்கள் பாப்ப உமாநாத் திருவுருவபடத்தை மாவட்டக்குழு உறுப்பினர் வத்ஸலாவும்,புதுச்சேரி முதுபெறும் தோழர் ராமமூர்த்தியின் திருவுருவபடத்தை மாவட்ட துணைத்தவைர் ராஜாங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர்.இவ்விழாவில் சிஜடியூ வின் தமிழ்மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பங்கேற்று பேசினார்.முன்னதாக மாவட்ட செயலாளர் கே.முருகன் அணைவரையும் வரவேற்று பேசினார்.இவ்விழாவில் சிஜடியூ நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,நாராயணன்,பாபு,சதீ°பாபு,மற்றும் திரளான சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Read more...

துப்புரவு பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது குறித்து புதுச்சேரி அரசு சிபிஜ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்

0 comments

புதுச்சேரி மே 26
துப்புரவு பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது குறித்து புதுச்சேரி அரசு சிபிஜ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழுக்கூட்டம் செயற்குழு உறுப்பினர் பி.உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கலந்துகொண்டார்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மக்கள் விரோத கொள்கைகளும்,தவறான ஆட்சி நடைமுறையால் புதுச்சேரி சட்டசபை த்தோர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றி என்.ஆர் காங்கிரஸ்-அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெறச்செய்துள்ளனர்.புதிய அரசு மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும்,முடங்கியுள்ள மக்கள்நலத்திட்டங்களையும்,குவிந்துள்ள மக்கள்பிரச்சனைகளை காலம் தாழ்த்தாமல் முழுமையான அமைச்சரவை அமைத்து சட்டபேரவை கூட்டத்தை கூட்டி நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லுhரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துவங்குவதோடு அரசு இடஒதுக்கீடான 50 சதவீதத்தை தனியார் கல்லுhரிகளிலிருந்து பெறுவதை உறுதிபடுத்த வேண்டும்.மேலும் குறைக்கப்பட்ட காமராஜர் கல்வி உதவிதொகையை இந்தாண்டு முதல் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லுhரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்கையை துவங்க நடவடிக்கை எடுக்க வெண்டும்.
நிதி மோசடி-கறுப்பு பணப்பதுக்கள் பேர்வழி ஹசன் அலிக்கு போலி பா°போர்ட் எடுத்து கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங்கை ஆளுநர் பதவிலிருந்து நீக்க குடியரசுத்தலைவர் தயக்கம் காட்டுவது கவலையளிப்பதாகும்.இந்தநிலையில் புதுச்சேரி முழுவதும் துப்புரவு பணியை 19 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திற்க்கு ஆளுநர் இக்பால்சிங் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.மேற்படி நிறுவனம் கருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே தனியார் நிறுவனத்திற்கு துப்புரவு பணி ஒப்பந்தம் வழங்கியது குறித்து சிபிஜ விசரானணக்கு உத்திரவிட வேண்டும்.மேலும் இக்பால்சிங் பதவி காலத்தில் அவரால் கையெப்பம் மிட்டு அனுமதிக்கப்பட்ட கோப்புகள் குறித்து மறு ஆய்வு நடத்தி மாநிலத்தின் மரியாதையை பாதுகாக்க வேண்டும்.மேலும் ஆளுநர் இக்பால்சிங்கை இந்திய பதவியிலிருந்து நீக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read more...
Tuesday, May 31, 2011

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0 comments
புதுச்சேரி, மே 30-

ஒப்பந்த தொழிலாளர் களுக்கு முதல் வாரத்தி லேயே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் 7 ஆம் தேதிக்குள் சம்பள பட்டுவாடா செய்ய வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ யை முறையாக பிடித்தம் செய்து கட்ட வேண்டும், சமவேலைக்கு சமஊதி யத்தை அமல்படுத்த வேண் டும், சட்டவிரோத சம்பள வெட்டை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ் என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதி ரில் நடந்த இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் முருகையன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சங்கரன், ஒப் பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மாநில உதவி தலைவர் தமிழ்வேந்தன், உதவி செய லாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் திர ளான ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Tuesday, May 17, 2011

CPI(M) DEMONSTRATION AGAINST PETROL PRICE HIKE

0 comments
CPI(M) DEMONSTRATION AGAINST PETROL PRICE HIKE NEAR AJANTHA SIGNAL

BSNL union employee struggle against petrol price hike

CITU demontration against petrol price hike
CPI(M) Ozhavakarai commiitee demonstration against petrol price hike
DREU Employee Union Staged demonstration inside campus of Puducherry Railway Station for Various demand for improvement of railway station and against petrol price hike.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com