
புதுச்சேரி டிச-8
அந்நிய பல்கலைகழகத்தை இந்திய நாட்டில் அனுமதிப்பதை எதிர்த்து பாலிக்டெக்னிக் மாணவர்கள் புதுச்சேரியில் வகுப்புகளை புறக்கனித்து போராட்டம் நடத்தினர்.
இந்திய உயர்கல்வியில் அந்நிய நாட்டு பல்கலைகழகத்தை அனுமதிக்கும் மசோதாவை மத்திய அரசு திரும்பபெறவேண்டும்.இந்திய பல்கலைகழகங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.அடிப்படை கல்வி வளர்சிக்கு போதுமான நிதியை ஒதுக்கி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு இலா°பேட் மோதிலால்நேரு பாலிடெக்னிக் சங்க கிளை தலைவர் வினோத் தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித்குமார்,இணைசெயலாளர் பார்த்தசாரதி, பாலிடெக்னிக் கிளை நிர்வாகிகள் கலைவாணன்,வேல்முருகன்,பாரதிராஜ,அருண்,சூர்யா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக வாகுப்புகளை புறக்கனித்து ஊர்வலாமாக சென்ற மாணவர்கள் நேதாஜி சுபா° சந்திரபோ° சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் உள்ளது.
புதுச்சேரி,டிச-8
இளம் பெண் கணாமல் போனது குறித்து புதுச்சேரிஅரசு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
புதுச்சேரி மாநிலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும், சீண்டல்களும் அதிகரித்து வருகிறது.மாநில அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு அதிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நட்சத்திர ஓட்டல் கட்டினால் ஒருகோடி மானியம் அளித்து வருகிறது.ஒருபுறத்தில் சொர்க்கபுரி போன்ற தோற்றமும், மறு புறத்தில் வளர்ந்து வருகிற வறுமையும், சீரழிவு கலாச்சாரத்திற்கு அடிப்படை காரணமான அமைந்துள்ளன.இதன் வெளிப்பாடாக அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் ரம்யா (எ)க°துhரி 16-வயது நிரம்பிய இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழிலுக்கு கட்டாயபடுத்திய விவகாரத்தில் விடுதிமேலாளர் உள்ளிட் 4பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில் காவல்துறை கட்டுபாட்டில் இருந்த ரம்யாவிற்கு மருத்துவபரிசோதனை செய்ய அரசு மருத்துவனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.அப்போது திடிரென்று ரம்யா வை காணவில்லை என்று காவல்துறை சேர்ந்த பெண் காவலர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட ரம்யா எங்கு உள்ளார் என்பது கேள்விகுறியாக உள்ளது.எனவே இவ்வழக்கு குறித்து நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.இளம் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் சார்பில் முதுநிலை கண்கானிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.தற்போது மூன்று மாதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் தேர்தல் துறை ஆனையர் நியமிக்கபடாதது புதுச்சேரி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய போரட்டம் நடத்தபடும்.
மேலும் புதுச்சேரி அரசுக்கு வரவேண்டிய பல்வேறு திட்ட நிதியை மத்திய காங்கிர° ஆட்சி =தடுத்து வருகிறது.எனவே இதுகுறித்து மாநில முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் .இவ்வாறு கூறினார்கள்.உடன் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,மாதர் சங்க செயலாளர் இ.சத்யா ஆயியோர் உடன் இருந்தார்.
புதுச்சேரி,டிச-8
துணைத்திட்ட நிதியின் கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் முதல்வர் என்.ரங்கசாமியிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தல்.
தலித் மக்களுக்கே துணைத்திட்ட நிதியை முழுவதும் செலவு செய்ய வேண்டும்.தலித் மாணவர்கள் விடுதியை உரிய முறையில் பாரமரிக்க வேண்டும்.தலித்மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மாண்யம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் தலித்சுப்பையா,பொதுசெயலாளர் ராமசாமி,பொருளாளர் கொளஞ்சியப்பன்,நிர்வாகிகள் கலிவரதன்,நிலவழகன்,முருகன்,நடராஜன்,சரவணன்,தவமணி உள்ளிட்டோர் முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை சாசனத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர்.மேலும் அமைச்சர்கள் சந்திரகாசு,ராஜவேலு,பன்னீர்செல்வம்,ஆகியோரையும் சந்தித்து வலியுறுத்தினர்.
படம் உள்ளது
Read more...